சமகால அரசியலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு: நேரலையில் சிறீதரன்
2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரிலிருந்தே நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அரசியல் மாற்றங்களில் தமிழரசு கட்சியின் தற்போதைய நிலைப்பாடும் பலரால் பேசப்பட்ட ஒன்றாகும்.
அந்தவகையில், அக்கட்சியின் தலைவர், முக்கியஸ்தர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவிய நிலையில் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து, இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் வடக்கு கிழக்கு தமிழர்களின் ஆதரவு தேசிய மக்கள் சக்திக்கு கிடைக்கப்பெற்றமையுடன் புதிய மாற்றத்திற்கான முதல் அடி இது எனவும் பலராலும் தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னணியில், அண்மையில் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் கட்சியிலும் உறுப்பினர்களுக்கும் இடையிலும் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமா என்பது பலரது எதிர்பார்ப்பு.
இது தொடர்பிலான லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியி்ன் நேரலையில், தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri