கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் காணிப் பிணக்குகளுக்கு தீர்வு
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் நிலவி வந்த காணிப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான காணி நடமாடும் சேவை இன்றைய தினம் (30-07.2026) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பல காணிப்பிணக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு உரிய தீர்வுகள் வழங்கப்பட்டன.
இனப்படுகொலை தடயங்களை அழித்துவிட்டு இளையோரை வரலாறு தெரியாதவர்கள் என விமர்சிப்பது அபத்தம் - பொ. ஐங்கரநேசன் காட்டம்
நேரடி தீர்வு
மக்களுக்கு தங்களது காணி உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு துரிதமான மற்றும் நேரடி தீர்வுகளை வழங்குவதற்கான இத்தகைய சேவைகள் மாவட்ட மட்டத்தில் பிரதேச செயலர்பிரிவு ரீதியாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நடமாடும் சேவையில் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், வடமாகாணக் காணி ஆணையாளர் இ.குருபரன்,மேலதிக அரசாங்க அதிபர் (காணி) அஜிதா பிரதீபன் ,கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன்,வடமாகாண உதவி காணி ஆணையாளர் விதுசா தினேஸ் ,மாகாணக் காணி ஆணையாளர் திணைக்கள அலுவலர்கள் மற்றும் பிரதேச செயலக அலுவலர்கள் உள்ளிட்டோர். கலந்து கொண்டு மக்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்தனர்.



500 மில்லியன் ரூபாய் நீதி ஒதுக்கப்பட்டும் புனரமைக்கப்படாத பேருந்து நிலையம் - பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 4 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam