விடுதலைப் புலிகள் நாட்டிய தேக்குகள்: இன்று அவற்றின் நிலை என்ன..! நினைவை மீட்டும் மக்கள்

Mullaitivu Vavuniya Northern Province of Sri Lanka
By Uky(ஊகி) Sep 18, 2023 02:27 AM GMT
Uky(ஊகி)

Uky(ஊகி)

in சமூகம்
Report

தனிநாட்டுக் கோரிக்கையோடு ஆயுத வழிப் போரில் இறங்கியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். அவர்கள் காலத்தில் செய்த சமூக நலன் சார்ந்த செயல்கள் பல இன்றும் நன்மையளிக்கின்றன.

அதனால் நன்மையடையும் மக்கள் அவ்வப்போது அவற்றை மீட்டிப் பார்க்க தவறுவதில்லை.

மீள் வனமாக்கல்

தமிழர் பகுதியில் அமைக்கப்படும் கட்டடங்களின் பரிதாப நிலை! வெளிவரும் அதிர்ச்சிப் பின்னணி

தமிழர் பகுதியில் அமைக்கப்படும் கட்டடங்களின் பரிதாப நிலை! வெளிவரும் அதிர்ச்சிப் பின்னணி

அத்தகைய செயல்களில் ஒன்று தான் மீள் வனமாக்கல் செயற்பாடு. வன்னியின் எல்லா காடுசார்ந்த வீதிகளிலும் தேக்கு, சஞ்சீவி, மலைவேம்பு, வேம்பு காடுகளை காணலாம்.

விடுதலைப் புலிகள் நாட்டிய தேக்குகள்: இன்று அவற்றின் நிலை என்ன..! நினைவை மீட்டும் மக்கள் | Present Status Of Teak Trees

இது விடுதலைப் புலிகளின் முயற்சியாலனவை என்பது தெட்டத் தெளிவு. காடுகளை பாதுகாப்பதற்காகவும் காட்டு வளங்களை திட்டமிட்ட முறையில் பயன்படுத்துவதற்காக வனவளப் பாதுகாப்பு பிரிவை உருவாக்கி திறமையான செயற்பாடுகளை வெளிக்காட்டியிருந்தார்கள்.

முல்லைத்தீவில் பல வருடங்களாக பயன்படுத்தாது கிடக்கும் பழம்பாசி சந்தை (Photos)

முல்லைத்தீவில் பல வருடங்களாக பயன்படுத்தாது கிடக்கும் பழம்பாசி சந்தை (Photos)

குற்றத்துக்கான தண்டனை

அளவுக்கு அதிகமான மது போதையினால் ஏற்படும் குழப்ப நிலைகளின் போது ஏற்படும் சண்டை சச்சரவுகளுக்காக விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்ட தண்டனை வித்தியாசமானது.

விடுதலைப் புலிகள் நாட்டிய தேக்குகள்: இன்று அவற்றின் நிலை என்ன..! நினைவை மீட்டும் மக்கள் | Present Status Of Teak Trees

குடும்பங்களிலும் சரி பொது இடங்களிலும் சரி மதுபோதையில் ஒருவர் போடும் சண்டைகளிற்காக அத்தகைய தண்டனைகள் கிடைக்கும்.

கோபத்தால் ஏற்படும் முரண்பாடுகளினால் கூட இந்த தண்டனையை அனுபவித்தவர்கள் பலருண்டு. வீதியோர காடுகளை வெட்ட விடுவார்கள். அந்த நிலம் சுத்தமாக்கப்பட்ட பின்னர் மரக்கன்றுகள் நாட்டி வளர்க்கப்படும்.

அப்படி வளர்த்த தேக்குகள் தான் இந்த காடுகள் என ஒட்டுசுட்டான் - முள்ளியவளை வீதியில் உள்ள தேக்கங்காடுகளை (அந்த தேக்கங்காடுகள் தான் படத்தில் உள்ளன) நினைவு கூர்ந்தார் கூழா முறிப்பைச் சேர்ந்த வயதான ஒருவர்.

ஈழப் போரைத் தாங்கிய மண்ணின் விழுதுகளின் வீரச் செயல்களால் விளையப் போவது என்ன..!

ஈழப் போரைத் தாங்கிய மண்ணின் விழுதுகளின் வீரச் செயல்களால் விளையப் போவது என்ன..!

இந்த காடு முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திற்கு அண்மையாக ஆரம்பித்து கூழாமுறிப்பு வழிப்பிள்ளையார் ஆலயம் வரை நீண்டு செல்கிறது. இடையிடையே சஞ்சீவி மற்றும் மலைவேம்பு போன்ற வேறு மரக்காடுகளும் உருவாக்கப்பட்டிருந்தன.

அனுமதியின்றி வெட்டியதால் தண்டனை

அனுமதியின்றி வெட்டப்படும் மரங்களை கட்டுப்படுத்துவதற்காக விடுதலைப்புலிகள் நடைமுறைப்படுத்திய தண்டனையில் இதுவும் ஒன்று. வழங்கப்படும் மரக்கன்றுகளை குறிப்பிடப்படும் இடங்களில் நட்டு துளிர்க்கும் வரை நீரூற்றி வளர்க்க வேண்டும்.

விடுதலைப் புலிகள் நாட்டிய தேக்குகள்: இன்று அவற்றின் நிலை என்ன..! நினைவை மீட்டும் மக்கள் | Present Status Of Teak Trees

கன்றுகள் பட்டுப்போனால் (இறந்து) புதிய கன்றுகள் வழங்கப்படும். இந்த தண்டனையினால் மரங்களை வெட்டுவது வெகுவாக குறைந்ததாக கூறினார் இந்த தண்டனைக்குள்ளான ஒருவர். இந்த தண்டனை முறையை அவர் பாராட்டியும் கருத்துரைத்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு பொதுச் சந்தையின் மோசமான நிலைமை: மக்கள் கண்டும் காணாமலும் இருப்பதேனோ..! (Photos)

முல்லைத்தீவு பொதுச் சந்தையின் மோசமான நிலைமை: மக்கள் கண்டும் காணாமலும் இருப்பதேனோ..! (Photos)

காடுகளின் பராமரிப்பு

தற்போது வன்னியில் காடுகளின் அளவு வெகுவாக குறைந்து வருகின்றது. இயற்கை காடுகளும் சரி மீள்வனமாக்கல் காடுகளும் சரி. அபிவிருத்தி மற்றும் விவசாயச் செய்கைகளால் பெருமளவு காடுகள் காணாது போகின்றன.

நந்தி சமரில் வெற்றிவாகை சூடிய அலையோசை விளையாட்டுக் கழகம்: கௌரவிக்கப்பட்ட பங்கேற்பாளர்கள்

நந்தி சமரில் வெற்றிவாகை சூடிய அலையோசை விளையாட்டுக் கழகம்: கௌரவிக்கப்பட்ட பங்கேற்பாளர்கள்

பாதுகாக்கப்பட்ட வனங்கள் எல்லைப்படுத்தப்பட்ட போதும் திட்டமிட்ட சிங்கள குடியேற்ங்களுக்காக முல்லைத்தீவு மாவட்ட மணலாற்றுப்பகுதி காடுகள் செல்லரிப்பது போல மெல்ல மெல்ல காணாது போவதனையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

மரக்கூட்டுத்தாபனத்தினரின் செயல்

தேக்கங்காடுகளை பராமரிப்பு தேவைக்காக இடைவெளியெடுத்தல் என்னும் செயலொழுக்கிற்கேற்ப குறிப்பிடத்தக்க தேக்குகள் மரக்கூட்டுத்தாபனத்தினரால் வெட்டப்பட்டுவதனையும் அவதானிக்க முடிகின்றது.

விடுதலைப் புலிகள் நாட்டிய தேக்குகள்: இன்று அவற்றின் நிலை என்ன..! நினைவை மீட்டும் மக்கள் | Present Status Of Teak Trees

வெட்டப்படும் தேக்குகளை விற்பதனால் மரக்கூட்டுத்தாபனத்தினர் அதிகளவு இலாபமிட்டுகின்றனர் என்பதையும் குறிப்பிட வேண்டும். விடுதலைப் புலிகள் போன்று தேக்குகளை இவர்கள் பராமரிப்பதில்லை என மக்கள் சிலர் குறிப்பிட்டனர்.

உற்று நோக்க வேண்டிய பொறுப்புணர்ச்சி: தெரிந்தும் நடந்தேறும் அவலம் (Photos)

உற்று நோக்க வேண்டிய பொறுப்புணர்ச்சி: தெரிந்தும் நடந்தேறும் அவலம் (Photos)

விடுதலைப்புலிகள் தேக்குகளை நாட்டி வளர்த்த போது அவர்களின் பணியாளர்களாக பணிசெய்த அனுபவம் தமக்கிருப்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

வானுயர்ந்த தேக்குகள்

விடுதலைப் புலிகள் நட்டு வளர்த்து விட்டுச் சென்ற தேக்கு உள்ளிட்ட எல்லா மரங்களும் நன்றே வளர்ந்து காட்சியளிக்கின்றன. இன்று வாழும் இலங்கையர் எல்லோருக்குமே அவை பயன்படுகின்றன.

சிங்களவர், முஸ்லிம்கள், தமிழர் என்ற வேறுபாடின்றி இந்த தேக்கங்காடுகளில் இருந்து பெறும் வெட்டுமரங்கள் பயன்படுகின்றன. விசுவமடு தேராவில் தேக்குகள், கேப்பாப்புலவு தேக்குகள், கூழாமுறிப்பு தேக்குகள் என்று பெருவளர்ச்சிக்குள்ளான சில தேக்கங்காடுகளை மக்களுடன் உரையாடும் போது நினைவு மீட்டினார்கள்.

விடுதலைப் புலிகள் நாட்டிய தேக்குகள்: இன்று அவற்றின் நிலை என்ன..! நினைவை மீட்டும் மக்கள் | Present Status Of Teak Trees

2009க்கு முன்னர் விடுதலைப்புலிகளின் நிழல் அரசாங்கம் ஆச்சரியப்படுமளவுக்கு செயற்பட்டதை இன்றும் வியப்பாக எல்லோராலும் பேசப்படுவதை அவதானிக்கலாம்.

ஊழல் இல்லாத பொறுப்புணர்வோடு கூடிய நேர்த்தியான சேவைகளை வழங்கிய ஒரு அரசாங்க செயற்பாடாக அது இருந்தது.

முதல் வைத்திய மாணவி: பெருமை கொள்ளும் குமுழமுனை மகாவித்தியாலயம்

முதல் வைத்திய மாணவி: பெருமை கொள்ளும் குமுழமுனை மகாவித்தியாலயம்

எனினும் இன்றைய இலங்கையின் அரசாங்க இயந்திரம் மோசமான பொருளாதார கொள்கைகளோடும் கடன் சுமை ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் ஊழல் நிறைந்த தேசமாக இருப்பதோடு ஒப்புநோக்கி பேசுவதையும் காண முடிகிறது.

மரண அறிவித்தல்

Penang, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

06 Oct, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், Élancourt, France

01 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Alvai South, மல்லாகம்

11 Oct, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், மானிப்பாய்

03 Oct, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கிளிநொச்சி

09 Oct, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Montreal, Canada, Cornwall, Canada, Hamilton, Canada

22 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஜெயந்திநகர், Rehlingen-Siersburg, Germany

09 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, London, United Kingdom

09 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, Bünde, Germany

10 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், கந்தர்மடம்

10 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வெள்ளவத்தை

08 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நவாலி கிழக்கு, Jaffna

10 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

ஊராங்குனை, Eschborn, Germany

01 Oct, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, கோண்டாவில்

08 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, கொழும்பு, Toronto, Canada

09 Oct, 2023
மரண அறிவித்தல்

உரும்பிராய், மெல்போன், Australia

05 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சங்கானை, யாழ்ப்பாணம்

05 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US