நந்திக்கடலில் பெரியளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தும் களைகள்

Agriculture Water And Action For Rural Development Mullaitivu Tamil
By Uky(ஊகி) Dec 27, 2023 01:08 PM GMT
Uky(ஊகி)

Uky(ஊகி)

in சமூகம்
Report

விவசாய நிலங்களில் களைகளாக விவசாயிகளுக்கு தொல்லை கொடுக்கும் தாவரங்கள் பலவுண்டு.

நந்திக்கடலில் நீர்வாங்கு பகுதிகளில் வளர்ந்து வெள்ளத்தோடு வயல் நிலங்களில் செல்லும் வேலன்பாசியினால் இரட்டிப்புச் செலவாகின்றதாக விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.

நீரில் நன்கு வளரும் வேலன்பாசி சல்வீனியா எனவும் அழைக்கப்படுகிறது. விவசாயத்நில் இது ஒரு நீர்க்களை.

முல்லைத்தீவு - வலைஞர்மடத்தில் மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் (Photos)

முல்லைத்தீவு - வலைஞர்மடத்தில் மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் (Photos)

முல்லைத்தீவு வயல்களில் தாக்கம் 

சிலாவத்தை, முல்லைத்தீவு,வற்றப்பளை வயல்களில் பெரியளவிலான தாக்கத்தினை சல்வீனியா வருடந்தோறும் ஏற்படுத்தி வருகின்றது.

நந்திக்கடலில் பெரியளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தும் களைகள் | Permanent Solution Mullaitivu Farmers

யாவரும் இதனை பொருட்படுத்தாமல் செல்வது ஆச்சரியமானதாக இருக்கின்றது.

மழைகாலங்களில் விரைவாக பெருக்கமடைந்து கொள்ளும் இது வெள்ளத்தோடு வயல்களுக்குள் வருகின்றது.

நெல் பயிர்களிடையே வளர்ந்து பரவுகின்றது. இதனால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு விளைச்சல் குறையும் நிலைக்கு கொண்டு சென்று விடுகின்றது.

நந்திக்கடலின் நீர்வாங்கு பகுதிகளில் அதிகமாகவும் முல்லைத்தீவு நகரப்பகுதியில் உள்ள சிற்றாறுகளில் தேங்கி இருக்கும் நீரிலும் சல்வீனியா இருக்கிறது.ஒவ்வொரு வருடமும் இதன் தாக்கம் அதிகமாகவே இருக்கின்றது என முல்லைத்தீவு விவசாயிகள் சிலர் குறிப்பிடுகின்றனர்.

மழை அதிகமாகும் போது நீர் வரத்து அதிகரிக்கும்.சல்வீனியாவைக் கொண்ட நீர்த் தேக்கத்தில் நீரின் மட்டம் உயரும். இதனால் அந்த நீர் வயல்களுக்குள் பரவிக் கொள்ளும்.

இலங்கையில் அரசியல் தீர்வு மிக அவசியம்: சம்பந்தனிடம் நியூசிலாந்து தூதுவர் வலியுறுத்து (Photos)

இலங்கையில் அரசியல் தீர்வு மிக அவசியம்: சம்பந்தனிடம் நியூசிலாந்து தூதுவர் வலியுறுத்து (Photos)

உடனடி தாக்கம்

நீரில் மிதந்து வளரும் களையான சல்வீனியாவும் பரவி வயல்களில் பயிர்களை பாதிக்கின்றது. பாதிப்பின் அளவு உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தாது இருப்பதால் அது இயல்பானதாகிவிட்டது.

எனினும் மெல்ல மெல்ல அதன் தாக்கம் விளைச்சலை பாதிக்கும் என அதன் தாக்கத்தால் பாதிப்படைந்த விவசாயி ஒருவர் குறிப்பிட்டார்.

நந்திக்கடலில் பெரியளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தும் களைகள் | Permanent Solution Mullaitivu Farmers

வயலுக்குள் சேர்ந்துள்ள சல்வீனியாவை வக்கடைகளை வெட்டிவிட்டு வயலில் உள்ள நீரை வெளியேற்றுவதன் மூலம் வெளியேற்ற முடியாது.

ஒரு சல்வீனியா இருந்தாலும் கூட அது விரைவாக வளர்ந்து பரவுகின்றது. அதனால் வேலையாட்கள் மூலமே அவற்றை அள்ளி அகற்ற வேண்டி இருக்கின்றது.

இது மேலதிகமாக செலவை ஏற்படுத்தி விடுகின்றது என அவர் மேலும் குறிப்பிட்டார். நீர்க்களைகளின் தாக்கம் குறித்த தெளிவின்மை பல விவசாயிகளிடம் இருப்பதையும் அவர்களுடன் உரையாடிய போது தெரிந்து கொள்ள முடிந்தது.

ஒரு சிலரே தெளிவோடு தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்கள்.

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம்பெற்ற திருவாசக விழா (Photos)

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம்பெற்ற திருவாசக விழா (Photos)

தடுத்திட தீர்வொன்று உண்டா

நந்திக்கடலில் முல்லைத்தீவு நகரத்தை ஒட்டியதாக அமைக்கப்பட்ட நீர் தடுப்பணையினால் நந்திக்கடலினை அடையும் நீர் வயல்களுக்குள் பரவி சல்வீனியா பரவுவதை தடுக்க முடிகிறது.

எனினும் இது முழுமையான தீர்வாக அமையவில்லை. இந்தப் பகுதி நீர்நிலைகளில் உள்ள சல்வீனியா அழிக்கப்பட வேண்டும்.

நந்திக்கடலில் பெரியளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தும் களைகள் | Permanent Solution Mullaitivu Farmers

அப்போது தான் அவை வயல்களுக்குள் வருவது தடுக்கப்படும். இது ஒன்று தான் நிரந்தரமான தீர்வாக அமையும். எனினும் இது செலவு கூடிய ஒரு முயற்சி.ஒருங்கிணைந்த செயற்பாடு அவசியம்.

இதனோடு தொடர்புடைய நிறுவனங்கள் கவனம் எடுத்தால் விவசாயிகளுக்கு இலகுவாக இருக்கும் என சுற்றுச் சூழலியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நந்திக்கடலில் பெரியளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தும் களைகள் | Permanent Solution Mullaitivu Farmers

மழையினால் சேரும் நீர் கடலுக்கு செல்லும் பாதையில் உள்ள வயல்களுக்கு அதிக பாதிப்பை சல்வீனியா வருடந்தோறும் ஏற்படுத்தி வருகின்றது.

நீரேந்து பகுதிகளில் உள்ள தாழ்நிலங்களில் வருடம் முழுவதும் தேங்கி இருக்கும் நீரில் இவை வளர்ந்துள்ளன.

நந்திக்கடலில் மஞ்சள் பாலத்திற்கு கீழ் உள்ள நீரில் சல்வீனியா அதிகளவில் இருப்பதை குறிப்பிடலாம்.

நந்திக்கடலில் பெரியளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தும் களைகள் | Permanent Solution Mullaitivu Farmers

மழை நீரின் வரத்து அதிகரிக்கும்போது இந்த சல்வீனியாவும் பரவலடைந்து வயல்களுக்குள் செல்கின்றது.

இந்த நீர் வயல்களுக்குள் செல்லாதவாறு தடுப்பணை இருந்தாலோ அல்லது வயல் வேலிகளில் கம்பி வலை, சிறு கண் ஊசிவலைகளையோ தடுப்பாக பயன்படுத்தினால் சல்வீனியா உள்வருவதை குறைக்கலாம் என தன் கருத்துக்களையும் விவசாய பாட ஆசிரியராக கடமையாற்றி வரும் விவசாயி ஒருவர் குறிப்பிட்டமையும் இங்கே நோக்கத்தக்கது.

வெளியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அதிரடி

வெளியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அதிரடி

சல்வீனியா எனும் நீர்க்களை

தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட தாவரம் சல்வினியா.ஏனைய இடங்களிலும் இது பரந்துள்ளது.

வெப்பமண்டல நீர்வாழ் தாவரம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனைய இடங்களில் இது ஒரு ஆக்கிரமிப்பு தாவரமாக இனம் காணப்பட்டுள்ளது.

நந்திக்கடலில் பெரியளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தும் களைகள் | Permanent Solution Mullaitivu Farmers

வட அமெரிக்கா, மெக்சிகோ, மேற்கிந்தியத் தீவுகள், ஆபிரிக்கா, யூரேசியா, தென் அமெரிக்க நாடுகள், மத்திய அமெரிக்கா, மடகாஸ்கர்,தென்போர்னியோ ஆசியாவின் பல பகுதிகளில் இன்று சல்வீனியா பரந்துள்ளமையை அவதானிக்கலாம் என தாவரவியல் கற்கையாளர்கள் குறிப்பிட்டுள்ளதும் நோக்கத்தக்கது.

சல்வினியேசி குடும்பத்தில் சால்வினியா இனத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாக பட்டியலிடப்பட்டுள்ளது. இலங்கையின் வடபுலத்தில் இது சல்வீனியா,வேலன்பாசி எனவும் அழைக்கப்படுகிறது. “Salvinia natans.L. All ” என்ற விஞ்ஞானப் பெயரைக் கொண்டுள்ளது.

நந்திக்கடலில் பெரியளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தும் களைகள் | Permanent Solution Mullaitivu Farmers

அன்டன் மரியா சால்வினி என்ற இத்தாலிய நாட்டு விஞ்ஞானியின் நினைவாக சால்வினியா எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கி.பி.1754 ஆம் ஆண்டில் ஜீன் பிரான்கோயிஸ் சேகுயரால் அறிக்கையிடப்பட்டு வெளியிடப்பட்ட ஒரு தாவரமாகும்.

பொதுவாக வட்டர்மாஸ் என அழைக்கப்படும் இதனை உயிரில் முறையிலும் இரசாய களைக்கொல்லிகளைப் பயன்படுத்தியும் அழிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  


மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US