கோர விபத்தில் சிக்கி இளைஞன் பலி: விசாரணையில் வெளியான தகவல்
கொழும்பு - அம்புல்கம, பனாகொட வீதியில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி மின்கம்பத்தில் மோதியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த இளைஞன் விபத்து ஏற்படும் போது தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஜல்தர, லெனகல பிரதேசத்தை சேர்ந்த தெனெத் சக்விதி என்ற 18 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திடீர் மரண விசாரணை
இந்த விபத்து தொடர்பான திடீர் மரண விசாரணை ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, விபத்து தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸ் போக்குவரத்து பிரிவு நிலைய பொறுப்பதிகாரி சப்-இன்ஸ்பெக்டர் ஹேமந்த தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
