சிறுவர்களை தவறாக வழிநடத்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்! எதிரணி விசனம்

Donald Trump Crime Bimal Rathnayake School Children NPP Government
By Rakesh Oct 06, 2025 10:25 PM GMT
Report

'நாட்டின் சொத்துக்களான சிறுவர்களை தவறாக வழிநடத்துவதற்கான சூழலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது என  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சபைமுதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க 16 வயது பூர்த்தியடைந்த சிறுவர்களுக்கு பாலியல் உறவில் ஈடுபட முடியும் என நாடாளுமன்றத்தில் கூறுகின்றார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்

சபை முதல்வரின் கருத்து 

இந்நாட்டில் சிகரட் கொள்வனவு செய்வதற்கு 21 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது சட்டமாகும். இவ்வாறான நாட்டில் 16 வயதுடையயோருக்கு இதுபோன்ற சுதந்திரம் வழங்கப்பட்டால் 2500 ஆண்டுகள் பழமையான பௌத்த தேரவாதத்தை பின்பற்றும் தாய்நாட்டின் ஒழுக்கத்துக்கு என்னவாகும்.

சிறுவர்களை தவறாக வழிநடத்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்! எதிரணி விசனம் | Npp Government Is Misleading Children

பௌத்தம் மாத்திரமின்றி ஏனைய அனைத்து மதங்களும் சிறுவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஒழுக்கத்தை சீரழிக்கும் வகையிலேயே சபை முதல்வரின் கருத்து அமைந்துள்ளது.

16 வயது சிறுமியொருவர் கர்ப்பம் தரித்தால் அந்த சிறுமிக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க வழங்கும் பதில் என்ன.

தேசிய மிருகக்காட்சிச்சாலையில் கைவரிசை காட்டிய திருடர்கள்

தேசிய மிருகக்காட்சிச்சாலையில் கைவரிசை காட்டிய திருடர்கள்

எயிட்ஸ் நோயாளர்கள்

 கடந்த வாரத்தில் இருவேறு பிரதேசங்களில் பிறந்த சிசுக்கள் வீதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. இவ்வாறான திருமணத்துக்கு முன்னதான பாலியல் உறவுகளால் எயிட்ஸ் உள்ளிட்ட நோய்கள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுகிறது.

சிறுவர்களை தவறாக வழிநடத்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்! எதிரணி விசனம் | Npp Government Is Misleading Children

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை 17 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

சுமார் 20 வயதுடைய இளைஞர், யுவதிகள் மத்தியிலேயே இந்நோய் அதிகளவாகக் காணப்படுவதாகவும், அதிக நோயாளர்கள் அநுராதபுரம் மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளதாகவும் ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்க தன்பாலீர்ப்பினரை அடிப்படையாகக் கொண்ட சுற்றுலாத்துறை மேம்படுத்தும் முயற்சிகளையும் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருவதற்கும், தாய்லாந்து செல்வதற்குமான நோக்கங்கள் வேறாகும்.

வெடுக்குநாறிமலை சிவன்ஆலய முன்னாள் தலைவர்- செயலாளரை ரிஐடி அழைப்பு

வெடுக்குநாறிமலை சிவன்ஆலய முன்னாள் தலைவர்- செயலாளரை ரிஐடி அழைப்பு

எதிரணி விசனம்

அரசாங்கம் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஜனாதிபதியும், வெளிவிவகார அமைச்சரும் தான் இதனை அனுமதிக்கவில்லை எனக் கூறினாலும், சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் இது குறித்த கடிதத்தை அனுப்பியவர்களுக்கு எதிராக இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சிறுவர்களை தவறாக வழிநடத்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்! எதிரணி விசனம் | Npp Government Is Misleading Children

குறித்த கடிதம் இன்றுவரை மீளப் பெறப்படவும் இல்லை. அமெரிக்கா போன்ற வல்லரசு நாட்டில் கூட ட்ரம்ப் இதை அனுமதிக்க விரும்பாத போது, எம்மைப் போன்று அபிவிருத்தியடைந்து வரும் நாடு எவ்வாறு அதனை அங்கீகரிக்க முடியும்.

இளைஞர்களின் வாக்குகளை நோக்கமாகக் கொண்டே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

மகாசங்கத்தினரும், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றனர். எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் ஆழமாக சிந்தித்து தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் வேகக் கட்டுப்பாடடை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞன் மரணம்

வவுனியாவில் வேகக் கட்டுப்பாடடை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞன் மரணம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US