மட்டக்களப்பில் மினி சூறாவளி தாக்கியதில் பல வீடுகள் சேதம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மினிசூறாவளி தாக்கியதில் வீடுகள் பல சேதமடைந்துள்ளன.
குறித்த அனர்த்தம் இன்று (27.12.2023) காலை இடம்பெற்றுள்ளது.
வடக்கு கிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை
நேற்று முதல் வடக்கு கிழக்கில் சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்ட வேற்றுச்சேனை பகுதியில் மினிசூறாவளியினால் 15வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் பல மரங்களும் முறிந்த நிலையில் வீதியில் காணப்படுகின்றன.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்தை மேற்கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர் கொள்கின்றனர்.
தொடரும் சீரற்ற வானிலை
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்று பார்வையிட்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குறித்த பகுதி மக்களுடன் கலந்துரையாடலையும் மேற்கொண்டுள்ளார்.

எனினும், தொடர்ந்து சீரற்ற காலநிலை நிலவுவதன் காரணமாக பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறு வானிலை அவதானிப்பு நிலையம் அறிவுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 5 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan