மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேன! மகிந்தவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதம்
ஏர் பாஸ் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
எதிர்வரும் 12-ம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மகிந்த ராஜபக்ஷவிற்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதம் இன்றைய தினம் தங்காலையில் அமைந்துள்ள காட்டன் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் திடீர் மரணம்! CCD பிரிவிற்கு அவசரமாக மாற்றப்பட்ட விசாரணைகள்
கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழப்பு
கடந்த வாரம் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு மகிந்தவிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிய போதிலும் கடிதம் வழங்கப்பட்டிருக்கவில்லை.

இந்த கடிதம் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்று 24 மணித்தியாலங்களுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு விமானங்கள் கொள்வனவு செய்தபோது ரெண்டு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பணத்தை கையூட்டாக பெற்றுக் கொண்டதாக கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மகிந்தவிற்கு அதிகாரப்பூர்வ கடிதம்
விசாரணைகளின் போது இவ்வாறு லஞ்சமாக பெற்றுக்கொண்ட தொகையில் 2 மில்லியன் ரூபாவினை அப்போதைய அமைச்சர் பிரியங்கரவிற்கும் 60 மில்லியன் ரூபாவினை அப்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் வழங்கியதாக கபில சந்திரசேன வாக்குமூலம் அளித்தார் என லஞ்ச உழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் முன்னதாக நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

எனினும் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு வெளியிட்டு கபில சந்திரசேனவினால் சத்யகிரதாசி ஒன்று நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டதாகவும் அச்சுறுத்தல் விடுத்து வாக்குமூலம் பதியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மகிந்த விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்த நிலையில் அவ்வாறான எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் கிடைக்கப்பெறவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டு வந்தனர்.
எனினும் இன்றைய தினம் இந்த அதிகாரப்பூர்வ கடிதம் மகிந்தவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அடுத்த சில மணி நேரங்களில் தமிழக அரசியலில் ஏற்படவுள்ள அதிரடி திருப்பம்! வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு