கட்டுநாயக்க விமானத்தில் காத்திருந்த வெளிநாட்டு யுவதி - பைக்குள் இருந்த பெறுமதியான பொருள்: அதிரடி கைது
கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 352 மில்லியன் ரூபாவுக்கும் அதிக சந்தை மதிப்புடைய சுமார் 36 கிலோ கிராம் ‘ஹஷிஸ்’ போதைப்பொருளுடன் 18 வயது வெளிநாட்டு யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர், இவ்வளவு பெறுமதியான போதைப் பொருட்களை இலங்கைக்குக் கடத்தி வர முயன்ற போதே இலங்கை சுங்கப்பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையின் மொத்த மதிப்பு சரியாக 352 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் எனச் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
352 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சந்தேகநபரான 18 வயதுடைய யுவதி கனடா - டொராண்டோ நகரில் இருந்து டுபாய் வழியாக நேற்று(23.06.2026) இரவு, எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான ஈ.கே. - 650 என்ற விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

விமான நிலையத்தின் வருகை முனையத்தில் மேற்படி யுவதியின் நடத்தையில் சந்தேகமடைந்த சுங்கப்பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள், அவரை இடைமறித்து அவரது பயணப் பொதிகளை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.
வெளிநாட்டு யுவதிக்கு பின்னால் இருக்கும் வர்த்தகர்
இதன்போது, அவரது பயணப் பைகளுக்குள் மிகவும் நுணுக்கமான முறையில் இரகசிய அறைகள் அமைக்கப்பட்டு, பொதி செய்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 35 ஆயிரத்து 265 கிராம் (சுமார் 36 கிலோ கிராம்) எடையுடைய 'ஹஷிஸ்' போதைப்பொருள் சுங்க அதிகாரிகளால் கண்டறியப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்றுடன் இந்த யுவதிக்குள்ள தொடர்பு மற்றும் இந்த போதைப்பொருள் இலங்கையில் யாருக்கு விநியோகிப்பதற்காகக் கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பான முதற்கட்ட விசாரணைகளை இலங்கை சுங்கப்பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
சுங்க விசாரணைகளைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட சந்தேகநபரான யுவதி மற்றும் கைப்பற்றப்பட்ட பல மில்லியன் ரூபா மதிப்புள்ள போதைப்பொருள் என்பன மேலதிக விரிவான விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது என்றும் சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சில்லறைத் தனமான அரசியல் செய்பவன் நான் அல்ல..! கிளிநொச்சி மக்களுக்கு குரல் கொடுக்கும் அர்ச்சுனா எம்.பி