கொழும்பில் கைப்பற்றப்பட்ட போலி நாணயத்தாள்கள் - இரகசிய நடவடிக்கையில் சிக்கிய நபர்
போலி நாணயத்தாள்களை அச்சிட்ட நபரொருவர் மேற்கு மாகாண தெற்கு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கோட்டை வீதி பகுதியில் நேற்று (8) நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலை
கோட்டையை சேர்ந்த 53 வயதான சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சம்பவ இடத்திலிருந்து ஏழு போலி ரூ. 5,000 நாணயத்தாள்கள், ஆறு ரூ. 1,000 நாணயத்தாள்கள், ஒரு ரூ. 500 நாணயத்தாள், ஒரு கணினி, ஒரு ஸ்கேனர் மற்றும் இதற்காகப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு உபகரணங்கள் மீட்கப்பட்டன.
இதற்கமைய, இன்று (09) சந்தேகநபரை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அச்சத்தில் நாட்டிலிருந்து அவசரமாக தப்பியோடும் அரசியல்வாதி மற்றும் உயர் அதிகாரிகள் - ஆதாரங்களுடன் நெருங்கும் புலனாய்வாளர்கள்
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan
துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம் News Lankasri