அடுத்த சில மணி நேரங்களில் தமிழக அரசியலில் ஏற்படவுள்ள அதிரடி திருப்பம்! வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் அடுத்த அரசினை யார் அமைப்பார்கள் என்ற கேள்வி தமிழக அரசியலில் பரபரப்பான சூழலை உருவாக்கியுள்ளது.
இதன் காரணமாக அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் கடும் எதிர்பார்ப்புடன் அடுத்தடுத்த நகர்வுகளை கவனித்து வருகின்றனர்.
பரபரப்பிற்கு மத்தியில் த.வெ.க வெளியிட்ட காணொளி! பெரும்பான்மை கிடைத்தாலும் விஜய் ஆட்சி அமைப்பதில் அடுத்தடுத்து சிக்கல்
அரசியல் மற்றும் சட்ட ரீதியாக ஆளுநர் முடிவு
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், ஆட்சி அமைக்க தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காததால், தவெக இன்னும் ஆட்சியை கைப்பற்ற முடியாத நிலையில் உள்ளது.

இந்நிலையில் நாளையுடன் தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், ஆளுநர் என்ன முடிவு எடுப்பார் என்பது கேள்வியாகியுள்ளது.
அரசியல் மற்றும் சட்ட ரீதியாக ஆளுநர் முதலில், பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு அளித்து தவெகவை ஆட்சி அமைக்க அழைக்கலாம். அப்படி அழைத்தால் குறிப்பிட்ட காலத்துக்குள் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் உருவாகும். அல்லது அடுத்த பெரிய கூட்டணியாக இருக்கும் திமுக அல்லது அதிமுக அணிக்கு வாய்ப்பு வழங்கலாம். வெளியிலிருந்து ஆதரவு பெறும் கூட்டணிகள் மூலம் அரசு அமைக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை
இந்த இரண்டிலும் எந்தக் கட்சியும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டால், குடியரசுத் தலைவர் ஆட்சிக்கான பரிந்துரையை ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பலாம். அவை நடந்தால் தமிழ்நாட்டில் சட்டப்பேரவை செயலிழக்கும். இதன்பின்னர் ஆறு மாதங்களுக்குள் புதிய தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.
இதனால் அடுத்த சில மணி நேரங்கள் தமிழக அரசியலில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன.
விஜய் முதல்வராக பதவியேற்பாரா, புதிய கூட்டணி உருவாகுமா, அல்லது தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைலுக்கு வருமா என்ற கேள்வி பலர் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த சூழலில் தவெக தலைவர் விஜய் ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், முதலில் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. அதன் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தன.இதனால் தவெகவின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.
மூன்று முறை ஆளுநரை நேரில் சந்தித்து விஜய் கடிதம் வழங்கியிருந்தாலும், பெரும்பான்மை உறுதி செய்யப்படவில்லை என்ற காரணத்தால் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படவில்லை.
திருமாவளவனின் முடிவு
தற்போது தமிழக அரசியலின் முழு கவனமும் விசிக தலைவர் தொல்.திருமாவளவனின் முடிவின் மீது திரும்பியுள்ளதுடன், அந்த கட்சி எந்த நிபந்தனைகளை முன்வைக்கும், தவெக அதனை ஏற்குமா என்பது இன்னும் வெளியாகவில்லை.

இதற்கிடையே அதிமுக தரப்பும் அமைதியாக அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில், புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது சென்னைக்கு திரும்பியுள்ளனர்.
அமமுக எம்எல்ஏ காமராஜின் பெயரில் த.வெ.க போலியான ஆதரவு கடிதம் ஆளுநரிடம் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள நிலையில், இது தொடர்பாக பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியலை மேலும் சூடுபிடிக்கச்செய்துள்ளது.
அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க... இரகசியமாக ஈரானுக்கு மிகப்பெரிய உதவி செய்த பாகிஸ்தான் News Lankasri