பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் திடீர் மரணம்! பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு
புதிய இணைப்பு
ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான அறிக்கையை, ஆய்வகப் பரிசோதனைகளைத் தொடர்ந்து வெளியிட சட்ட மருத்துவ அதிகாரிகள் குழு முடிவு செய்துள்ளது.
இதற்காக உடற்கூறு மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணை கொழும்பு குற்றப்பிரிவிடம் (CCD) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், கொள்ளுப்பிட்டியவில் உள்ள வீட்டில் இருந்து நேற்று ( 08) சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் மரணம்! பிரேத பரிசோதனை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
கபில சந்திரசேனவின்உடலுக்கு பிரேத பரிசோதனை
குறித்த வீட்டின் ஓர் அறையில் கபில சந்திரசேனவின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கபில சந்திரசேன சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
இதற்கமைய, கபில சந்திரசேனவின்உடலுக்கு பிரேத பரிசோதனை நடத்துவதற்காக ஐந்து பேர் கொண்ட நிபுணர் தடயவியல் மருத்துவக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இவரது மரணம் தொடர்பான விசாரணை தற்போது கொழும்பு குற்றப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தடயவியல் மருத்துவக்குழு பிரேதப்பரிசோதனை
இதற்கிடையில், சந்திரசேனவின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடத்துவதற்காக, கொழும்பு பிரத்தியேக தடயவியல் மருத்துவ அதிகாரி ஸ்ரீயந்த அமரரத்ன தலைமையிலான ஐந்து பேர் கொண்ட நிபுணர் தடயவியல் மருத்துவக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுயியல் நிறுவனத்தில் இன்று காலை பிரேதப் பரிசோதனை தொடங்கப்பட்ட நிலையில்,தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பின்னணியில், கபில சந்திரசேன நேற்று சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்திருந்தார்.
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் சந்தேகம்! விரையும் முக்கிய அதிகாரிகள் - பொலிஸ் மோப்ப நாய்களும் வரவழைப்பு
அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க... இரகசியமாக ஈரானுக்கு மிகப்பெரிய உதவி செய்த பாகிஸ்தான் News Lankasri