திடீரென உயிரிழந்த கபில சந்திரசேன! விசாரணைக்காக வீட்டிற்கு விரைந்துள்ள முக்கிய அதிகாரிகள் - பொலிஸார் குவிப்பு
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கபில சந்திரசேனவின் மரணம் குறித்து கொள்ளுப்பிட்டிய பொலிஸார் தற்போது விசாரணையை தொடங்கியுள்ளதுடன், முக்கிய அதிகாரிகள், பொலி்ஸ் அதிகாரிகள் என பலர் கபில சந்திரசேனவின் கொள்ளுப்பிட்டியவில் உள்ள வீட்டிற்கு விரைந்துள்ளனர்.
எயார்பஸ் விமானங்கள் கொள்வனவு மோசடி
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவுக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்னர் பிணை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணை வழங்குவதற்காக, அவரது உறவினர்கள் எனக்கூறி போலி பிணையாளர்கள் இருவர் நீதிமன்றில் முன்னிலையானமை தெரியவந்தமையை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பொலிஸார் விசாரணை
இதனையடுத்து நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டின் பேரில் அவரை மீண்டும் கைது செய்யுமாறு நீதிமன்றம் நேற்று (7) உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் கபில சந்திரசேனவின் சடலம் கொள்ளுப்பிட்டியவில் உள்ள வீட்டில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தது.
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam