இலஞ்சம் கோரிய காணி அதிகாரி! நீதிமன்றம் பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு
இலஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஓய்வு பெற்ற காணி அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 22 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் 30,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.
அனுராதபுரம் தம்புத்தேகமவில் உள்ள மகாவலி வலயத்திற்குள் மரங்களை வெட்டுவதற்கான அனுமதியை வழங்குவதற்காக 100,000 இலஞ்சம் கேட்டதாக குறித்த அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டது.
இலஞ்ச ஒழிப்புச் சட்டம்
இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் 100,000 ரூபாய் இலஞ்சத்தை வசூலிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட தரப்பினரான மர வியாபாரி ஒருவருக்கு 100,000 இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றவாளியான வி.எம். கமல் மஞ்சுள, வன நிலத் துறையில் பணியாற்றிய முன்னாள் அதிகாரி ஆவார். அவர் குற்றம் சாட்டப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு ஓய்வு பெறவிருந்தார்.
இருப்பினும், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால், அரச ஓய்வூதியத்திற்கான உரிமையை இழக்கிறார் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Numerology : இந்த தேதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் ராஜயோகம் உறுதி... நீங்க பிறந்த தேதி? Manithan
