மட்டக்களப்பில் திருடனை பிடிக்க சென்ற பொலிஸார் மீது பெண்கள் தாக்குதல்
மட்டக்களப்பு சின்ன ஊறணி பகுதியில் தொலைக்காட்சிப் பெட்டியை திருடிய திருடனை கைது செய்ய சென்ற பொலிஸார் மீது பெண்கள் உட்பட 6 பேர் கொண்ட குழுவினர் கத்தி பொல்லுகளால் தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த பொலிஸார் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் இரு பெண்கள் ஒரு ஆண் உட்பட 3 பேரை கைது செய்துள்ள நிலையில் 3 பேர் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
கத்தி குத்து தாக்குதல்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவு பகுதியிலுள்ள வீடு ஒன்றில் தொலைக்காட்சி பெட்டி ஒன்றை திருடிச் சென்ற சம்பவம் தொடர்பாக பொலிஸார் ஒருவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்ட வன்னி என அழைக்கப்படும் சின்ன ஊறணி பகுதியைச் சேர்ந்த திருடன் ஒருவர் தலைமறைவாகி வந்துள்ளார்.
திருடனை வீட்டில் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து சம்பவதினமான இன்று (25) பிற்பகல் கைது செய்வதற்காக சிவில் உடையில் சென்றுள்ளனர்.
இதன் போது அங்கு பொலிஸார் மீது திருடன் கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்ட நிலையில் அங்கிருந்த இரு பெண்கள் உட்பட குழுவினர் பொலிஸார் மீது தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டுவருகின்றனர்.

Numerology : இந்த தேதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் ராஜயோகம் உறுதி... நீங்க பிறந்த தேதி? Manithan

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam

Record Breaking வியாபாரம் ஆனது ரஜினியின் கூலி படம்... யார் எத்தனை கோடிக்கு வாங்கியுள்ளார்கள் தெரியுமா? Cineulagam
