கபில சந்திரசேன மர்ம மரணம்! பிணையாளர்களாக முன்னிலையானவர்கள் அம்பலப்படுத்திய தகவல்கள்

SriLankan Airlines Colombo Supreme Court of Sri Lanka Kapila Chandrasena
By Rakesh May 08, 2026 07:54 AM GMT
Report

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இந்நிலையில் கபில சந்திரசேனவின் பிணையாளர்களாக முன்னிலையான இருவர், பணத்துக்காக பொய் சாட்சி வழங்கியமை அம்பலமானதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் சந்தேகம்! விரையும் முக்கிய அதிகாரிகள் - பொலிஸ் மோப்ப நாய்களும் வரவழைப்பு

கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் சந்தேகம்! விரையும் முக்கிய அதிகாரிகள் - பொலிஸ் மோப்ப நாய்களும் வரவழைப்பு

பிணையாளர்களாக முன்னிலை

கடந்த 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்துக்காக 'எயார்பஸ்' விமானங்களைக் கொள்வனவு செய்தபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்று கபில சந்திரசேன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கபில சந்திரசேன மர்ம மரணம்! பிணையாளர்களாக முன்னிலையானவர்கள் அம்பலப்படுத்திய தகவல்கள் | Kapila Chandrasena Death Guarantors Investigation

இந்த வழக்கில் அவருக்கு 100 மில்லியன் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகளை நீதிமன்றம் விதித்திருந்தது.

கபில சந்திரசேனவுக்கு பிணை வழங்குவதற்காக சாஞ்சி ஆராச்சிவத்தையைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் மற்றும் முகமது இர்ஷான் ஆகிய இருவரும் பிணையாளர்களாக நீதிமன்றில் முன்னிலையாகினர்.

எனினும், இவர்களுக்கும் கபில சந்திரசேனவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணையின் போது அவர்கள் ஒப்புக்கொண்ட அதிர்ச்சித் தகவல்கள் வருமாறு,

தமக்கு கபில சந்திரசேன யார் என்றே தெரியாது. தலா 15 ஆயிரம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே பிணை நின்றதாக ஒப்புதல்.

 'தேவா' மற்றும் 'திஸ்ஸ' என்பவர்களின் தூண்டுதலின் பேரிலேயே நீதிமன்றத்துக்கு வந்ததாக வாக்குமூலம். தமக்கு நிலையான வருமானமோ அல்லது தொழிலோ இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு

பிணைச் சட்டத்தின்படி, சந்தேகநபரை நன்கு அறிந்தவர் மட்டுமே பிணையாளராக இருக்க முடியும். இந்த விதியை மீறியதுடன், கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் வாழைத்தோட்டம் பொலிஸார் இவர்களைக் கைது செய்தனர்.

நேற்றுமுன்தினம் கொழும்பு மேலதிக நீதிவான் லஹிரு சில்வா முன்னிலையில் இவர்கள் முன்னிலைபடுத்தப்பட்டனர்.

கபில சந்திரசேன மர்ம மரணம்! பிணையாளர்களாக முன்னிலையானவர்கள் அம்பலப்படுத்திய தகவல்கள் | Kapila Chandrasena Death Guarantors Investigation

இதன்போது, சந்தேகநபர்களின் பின்னணி மற்றும் கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்கள் பெறப்பட்ட விதம் குறித்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதிவான், இருவரையும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

மில்லியன் கணக்கிலான ஊழல் வழக்கில், கூலிக்கு பிணை நின்ற சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், அவர் இன்று காலை உயிரிழந்துள்ளமை பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

அரச நிறுவனங்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவுறுத்தல்

அரச நிறுவனங்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவுறுத்தல்

தமிழக அரசியலில் குழப்பம்! த.வெ.க தலைவர் விஜயின் உயிருக்கு ஆபத்து - பொலிஸில் முறைப்பாடு

தமிழக அரசியலில் குழப்பம்! த.வெ.க தலைவர் விஜயின் உயிருக்கு ஆபத்து - பொலிஸில் முறைப்பாடு


.  

5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US