நிறைவுக்கு வந்த சுகாதார ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு

Ministry of Health Sri Lanka Government Of Sri Lanka Hospitals in Sri Lanka
By Sajithra Feb 03, 2024 10:10 AM GMT
Report

சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றுடன் தற்காலிகமாக நிறைவு பெற்று சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.

குறித்த பணிபகிஷ்கரிப்பானது, கடந்த வியாழக்கிழமை (01.02.2024) காலை 6.30 மணி முதல் மறு அறிவித்தல் வரை தொடருமென தொழிற்சங்கங்களால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று (03.02.2024) காலை 6.30 மணியில் இருந்து எதிர்வரும் புதன்கிழமை வரை தற்காலிகமாக பணிப்பகிஷ்கரிப்பப்பு நிறுத்தப்படும் என சுகாதார தொழிற்சங்கங்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மைத்திரி மீது பலருக்கு நம்பிக்கை இல்லை : தயாசிறி ஜயசேகர - செய்திகளின் தொகுப்பு

மைத்திரி மீது பலருக்கு நம்பிக்கை இல்லை : தயாசிறி ஜயசேகர - செய்திகளின் தொகுப்பு


வேலைநிறுத்தத்தின் நோக்கம்

மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வருகை மற்றும் இடர்கால கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி சுகாதார சேவையின் 72 தொழிற்சங்கங்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தன.

நிறைவுக்கு வந்த சுகாதார ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு | Health Services Are Back To Normal

மேலும், சம்பளம் அதிகரிப்பு, ஊழியர் பற்றாக் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்தல் மற்றும் வாழ்வாதாரத்தினை அதிகரித்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த இரண்டு நாட்களாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்ததது.

இதனையடுத்து, அரசாங்க மருத்துவமனைகளின் பணிகளுக்கு உதவும் வகையில் முப்படையினர் அழைக்கப்பட்டிருந்தனர்.

கொழும்பில் களமிறக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகள்

கொழும்பில் களமிறக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகள்

இதன்போது மருத்துவமனைக்கு வரும் நோயாளர்களுக்கு தேவையான சேவைகளை வழங்குதல் மற்றும் மருத்துவர்களுக்கு உதவியாக செயற்படல் உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.  

நோயாளிகளின் சிரமங்கள்

குறித்த வேலை நிறுத்தத்தினால் வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததோடு பாரிய சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

நிறைவுக்கு வந்த சுகாதார ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு | Health Services Are Back To Normal

குறிப்பாக மாதாந்த கிளினிக் பரிசோதனைகளிற்கு வருபவர்கள் தமது நாளாந்தம் பயன்படுத்த வேண்டிய நோய்களுக்கான மருந்துகளை பெற முடியாத நிலையில் பெரிதும் சிரமப்பட்டதோடு, அதிக விலை கொடுத்து தனியார் மருந்தகத்தில் பெறவேண்டிய நிலையும் ஏற்பட்டிருந்தது.

தொடர்ந்தும், பல கிலோ மீற்றர் தூரத்தில் இருந்து முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு பெற்று வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக வருவதும், மீண்டும் சிகிச்சை பெறாமல் திரும்பிச் செல்வதுமான நிலையும் ஏற்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்தில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது

மேலும்,திருகோணமலை பொது வைத்தியசாலை மற்றும் வவுனியா பொது வைத்தியசாலை ஆகியனவற்றிற்கு சென்றிருந்த நோயாளிகள் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தனர்.

தற்காலிகமாக நிறைவு

இதன்படி 72 சுகாதார தொழிற்சங்கத்தினருக்கும் சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரனவுக்கும் இடையில் சுகாதார அமைச்சின் திணைக்களத்தில் நேற்றைய தினம் (02.02.2024)கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

நிறைவுக்கு வந்த சுகாதார ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு | Health Services Are Back To Normal

இதன்போது, ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் திறைசேறியின் செயலாளருடன் எதிர்வரும் 6ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று இடம்பெறும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்தே, 72 சுகாதார தொழிற்சங்கங்கள், இரண்டு நாட்களாக முன்னெடுத்திருந்த தொடர் பணிப்புறக்கணிப்பை எதிர்வரும் புதன்கிழமை வரை தற்காலிகமாக கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளன. 

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம்

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம்

மகிந்த கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராகும் சனத் நிஷாந்தவின் மனைவி

மகிந்த கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராகும் சனத் நிஷாந்தவின் மனைவி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US