இறப்பதற்கு முன் அமெரிக்கா - இஸ்ரேலுக்கு அலி லாரிஜானி விடுத்த செய்தி! ட்ரம்ப்பிற்கு கடும் எச்சரிக்கை
ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்புக் குழுவின் மறைந்த செயலாளர் அலி லாரிஜானி, அவர் படுகொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஈரானியத் தலைவர்களைக் கொல்வது நாட்டை மேலும் பலப்படுத்தும் என்று அமெரிக்காவையும் இஸ்ரேலையும் எச்சரித்திருந்தார்.
ஈரானின் தலைவர்களை கொல்வது அந்த நாட்டை பலவீனப்படுத்தாது; மாறாக மேலும் வலுப்படுத்தும் என்று அவர் கூறியிருந்தார்.
எப்ஸ்டீனுடன் ஊடக ஜாம்பவானின் இரகசிய உறவு! அம்பலப்படுத்திய அமெரிக்க நீதித்துறை கோப்புகள் - திடுக்கிடும் தகவல்கள்
அலி கமேனியின் நெருங்கிய ஆலோசகர்
ஈரானின் முன்னாள் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளரான லாரிஜானி, ஈரான் அரசியல் அமைப்பில் மிகச் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக கருதப்பட்டார்.

அவர் நாட்டின் பாதுகாப்புக் கொள்கைகளை வடிவமைத்த முக்கிய நபராகவும்,அயதுல்லா அலி கமேனியின் நெருங்கிய ஆலோசகராகவும் இருந்தார்.
கடந்த மாதம் வான்தாக்குதலில் காமெனெய் உயிரிழந்த பின்னரும் அவர் முக்கிய அரசியல் குரலாகத் திகழ்ந்தார்.
தன்னுடைய மரணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, மார்ச் 6 அன்று Al Jazeera-க்கு அளித்த பேட்டியில் லாரிஜானி, காமெனெயின் கருத்தை மீண்டும் வலியுறுத்தினார். “தியாகிகள் புரட்சியை இன்னும் வலுப்படுத்துவார்கள்” என்று அவர் கூறினார்.
“அயத்துல்லா காமெனெய் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் எங்கள் பல தளபதிகளும் உயிரிழந்தனர். ஆனால் அதற்குப் பிறகு அதே அளவிலான முக்கியமான ஒருவரும் கொல்லப்படவில்லை. இந்த நாட்டின் தலைவராக இருந்த காமெனெய் தியாகியாகிவிட்டார்.
ட்ரம்பிற்கு எச்சரிக்கை
மக்கள் துக்கப்படுகின்றனர்; ஆனால் அவர்கள் விழிப்புணர்வுடன் புரட்சியை ஆதரித்து நிற்கிறார்கள்,” என லாரிஜானி அந்த காணொளியில் தெரிவித்தார்.
“இப்போது அவர்கள் இன்னும் ஐந்து பேரை கொன்றால் என்ன? இத்தகைய பெரிய தலைவரை அவர்கள் கொன்று தியாகியாக மாற்றிவிட்டார்கள்.

மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். இதைத்தான் இமாம் காமெனெய், பேராசிரியர் Morteza Motahari அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் போது ‘தியாகிகள் புரட்சியை வலுப்படுத்துவார்கள்’ என்று கூறியிருந்தார்,” என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், “எங்களை கொல்லுங்கள்; அதனால் எங்கள் மக்கள் இன்னும் விழிப்புணர்வுடன் எழுந்திருப்பார்கள்” என்றும் அவர் எச்சரித்தார். மேலும், லாரிஜானி கடந்த வாரம் அமெரஜிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை நேரடியாக எச்சரித்தும் இருந்தார்.
“உங்களையே கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்; இல்லையெனில் நீங்களும் அழிக்கப்பட்டுவிடலாம்” என்று அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானின் தெய்வீக அரசியல்
அவர் கடைசியாக தெஹ்ரான் நகரில் மார்ச் 13 அன்று நடைபெற்ற குட்ஸ் தின பேரணியில் பொதுமக்களுடன் கலந்து கொண்டபோது காணப்பட்டார்.
67 வயதான அலி லாரிஜானி , இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரானின் அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அவரது மகனும் அந்த தாக்குதலில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

1979ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்கு பிறகு உயர்ந்த பதவிகளை வகித்த மத அறிஞர் குடும்பத்தைச் சேர்ந்தவர் லாரிஜானி. அவர் நுண்ணறிவு அரசியல்வாதியாகவும், நடைமுறைபூர்வமான அணுகுமுறையைக் கொண்டவராகவும் அறியப்பட்டார்.
அதே நேரத்தில், ஈரானின் தெய்வீக அரசியல் அமைப்பை பாதுகாப்பதில் உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருந்தார். ஈரான்-ஈராக் போர் காலத்தில் அவர் புரட்சிகர காவல் படையில் தளபதியாக பணியாற்றினார்.
பின்னர் ஈரானின் தேசிய ஒளிபரப்பு நிறுவனத்தின் தலைவராகவும் இருந்தார். அதனைத் தொடர்ந்து, அவர் பலமுறை உச்ச தேசியப் பாதுகாப்புக் குழுவை வழிநடத்தினார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து 12 ஆண்டுகள் சபாநாயகராக பணியாற்றியுள்ளார்.
தாக்குதல்களின் நோக்கம்
காமெனெய் தலைமையிலான ஈரானில் உள்ள முக்கிய உள்நாட்டு நபராக இருந்ததால், மேற்கத்திய நாடுகளுடன் நடந்த அணு பேச்சுவார்த்தைகள், பிராந்திய கூட்டாண்மைகள் மற்றும் உள்நாட்டு கலவரங்களை கையாளுதல் போன்ற பல முக்கிய பொறுப்புகளை அவர் மேற்கொண்டார்.
காமெனெயின் முழு அதிகார ஆட்சியை ஆதரித்தபோதிலும், மற்ற கடுமையான அரசியல் தலைவர்களுடன் ஒப்பிடும்போது அவர் சில நேரங்களில் தூதரக பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளை தீர்க்க முயன்ற மிதமான அணுகுமுறையையும் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

பெப்ரவரி 28 அன்று அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல்கள் தொடங்கிய பின்னர், முதலில் எதிர்வினை வெளியிட்ட முக்கிய ஈரானிய தலைவர்களில் ஒருவராக லாரிஜானி இருந்தார்.
அந்த தாக்குதல்களின் நோக்கம் ஈரானை சிதைக்கவும் அதன் வளங்களை கொள்ளையடிக்கவும் முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார். அதே நேரத்தில், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த நினைப்பவர்களுக்கும் அவர் கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
வீட்டிற்கு வந்த மனைவியை பார்த்து பாண்டியன் சொன்ன வார்த்தை, ஷாக்கான கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam