ஈரானினின் இரண்டு உயர் அதிகாரிகள் பலி - நடந்தது என்ன...!
ஈரானின் இரண்டு முக்கிய இராணுவ அதிகாரிகளை பலியான செய்தியை இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டிருந்தது.
அதில் ஒருவர் அலி லாரிஜானி. ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியானால், SNSC செயலாளராகவும், மறைந்த உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனியின் பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டவர்.
ஈரானின் அதியுயர் பாதுகாப்பு தேசிய பேரவையின் தலைவர்.
இஸ்ரேலின் அடுத்த தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டாவது உயர் அதிகாரி கோலம்ரெசா சுலைமானி. ஈரான் இஸ்லாமிய புரட்சிகர படையின் சிறப்பு பிரிவான பசிஜ் எனப்படும் துணை ராணுவப் பிரிவின் தலைமைத் தளபதி ஆவார்.
இந்நிலையில் இன்றைய காலகட்டத்தின் ஈரானின் பாதுகாப்பு படைகளினதும் அதனது செயற்பாடுகளினதும் மிகமிக முக்கியமான இலக்குகள்தான் இந்த இருவரும் என கூறப்படுகிறது.
குறிப்பாக இந்த இலக்குகள் வீழ்த்தப்பட்டாலும் இன்னொருவர் வந்து கொண்டிருப்பார்கள் எனக் கூறினாலும், ஈரானின் முக்கிய பலவீனமாக பாதுகாப்பு தளர்வு காணப்படுகிறது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி....