யாழ்ப்பாணத்தில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது
யாழ்ப்பாணம் - நெல்லியடி பகுதியில் தேடப்பட்டு வந்த இருவர் காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (02.02.2024) இடம்பெற்றுள்ளது.
39 மற்றும் 27 வயதான இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
திருட்டு சம்பவம்
கடந்த 2023ஆம் ஆண்டின் முற்பகுதியில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் திருட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணைகளுக்கமைய இருவரும் தேடப்பட்டு வந்த நிலையில் வசமாக சிக்கியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |