யாழில் குப்பைக்குள் மாயமான பெருந்தொகை தங்கம்
யாழ்ப்பாணத்தில் தவறுதலாக, தமது பெருமளவு தங்கம் குப்பையில் போடப்பட்டதாக,கூறப்படும் சம்பவம் தொடர்பாக, குடும்பம் ஒன்றினால், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கத்தானை பகுதியிலேயே, தமது 42 பவுண் தங்க நகைகள் தவறுதலாக குப்பையில், போடப்பட்டநிலையில், அவற்றை குப்பை அகற்றும் வாகனம் எடுத்துச்சென்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அதனை பெற்றுக் கொள்ள முடியாத நிலையிலேயே, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாக, முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்க நகைகள்
எனினும் குறித்த தரப்பினரை பொலிஸார் அழைத்து விசாரணை செய்த போதும், அது தொடர்பில் தகவல் எவையும் வெளியாவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னரும் இது போன்ற சம்பவம் ஒன்றில், நகரசபையினர் குப்பைக்குள் இருந்து 18 பவுண் தங்க நகைகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![ஸ்ருதி அம்மா வீட்டிற்கு வந்து செய்த சகுனி வேலை, மனோஜை அடித்த முத்து... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ](https://cdn.ibcstack.com/article/21e4ce93-e9a8-406f-85cf-1a0030383582/24-667a66a63885d-sm.webp)
ஸ்ருதி அம்மா வீட்டிற்கு வந்து செய்த சகுனி வேலை, மனோஜை அடித்த முத்து... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
![நொறுக்குத்தீனிக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள்: அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் அதிரடி](https://cdn.ibcstack.com/article/9d002e73-fbcf-47c7-b6ef-e7486b0e9c67/24-667ab51b2cccc-sm.webp)