க.பொ.த சாதாரணதர பரீட்சை எழுதும் மாணவனின் விபரீத முடிவு
கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் முதல் நாள் வினாத்தாளை எதிர்கொண்ட மாணவன் வீடு திரும்பிய பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜம்புகஹபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அத்துடன், குறித்த மாணவன் வத்தேகம கல்வி வலயத்தில் உள்ள பாடசாலையில் கல்வி கற்று வந்துள்ளார்.
மாணவனின் விபரீத முடிவு
மாணவன் தனது அறையில் உள்ள மின் இணைப்பிற்கு பயன்படுத்தப்படும் வயரில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவன் உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகரின் அறிவுறுத்தலின்படி மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
T20 உலக கிண்ணத்தால் ஒத்திவைக்கப்பட்ட திருமணம் - நீண்டகால தோழியை மணக்கும் குல்தீப் யாதவ் News Lankasri