யாழில் மாவட்ட ரீதியாக முதல் நிலை பெற்ற மாணவிக்கு கௌரவிப்பு
வெளியாகியுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை(G.C.E A/L) பெறுபேறுகளின் அடிப்படையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற வஜீனா பாலகிருஷ்ணன் என்ற மாணவியை யாழ். சமுர்த்தி வங்கி கௌரவித்துள்ளது.
இந்த கௌரவிப்பு நிகழ்வானது நேற்று(06.06.2024) இடம்பெற்றுள்ளது.
சித்தியடைந்த மாணவி
குறித்த மாணவி க.பொ.த உயர்தரப் பரீட்சை(G.C.E A/L) பெறுபேறுகளின் அடிப்படையில் மாவட்ட ரீதியாக முதல் நிலையையும், அகில இலங்கை ரீதியாக 32 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
அத்துடன், அந்த மாணவி பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய சாந்தை என்னும் கிராமத்தில் இருந்து சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |