கனடாவை சேர்ந்த இருவருக்கு யாழில் விளக்கமறியல்
கனடா (Canada) வதிவிட உரிமையை கொண்ட புலம்பெயர் நபர் ஒருவரையும் அவரது மகனையும் குடும்ப தகராறு காரணமாக விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த நபர்கள், கடந்த சில
வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் (Jaffna) - கோப்பாய் பகுதிக்கு வருகை தந்து அங்கு
தங்கியிருந்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த நபரின் அண்ணா முறையான ஒருவர் சுன்னாகம் பகுதியில் வசித்து வருகின்ற நிலையில், அவரை பார்ப்பதற்காக அங்கு சென்ற நபர், அவரின் சொத்தினை பெறுவதற்கு முயற்சித்துள்ளார்.
முறைப்பாடு பதிவு
இந்நிலையில், சுன்னாகத்தை சேர்ந்த அண்ணா முறையான நபரின் மகளின் கணவனுக்கும் கனடாவைச் சேர்ந்தவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, இரு தரப்பினரும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
மேலும், இரு தரப்பினரையும் விசாரணைக்குட்படுத்தி பொலிஸார் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை கனடாவை சேர்ந்த நபரையும் அவரது மகனையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அச்சுறுத்தும் செயற்பாடு
இந்நிலையில், விளக்கமறியல் காலம் முடிவடைந்த நிலையில் குறித்த வழக்கானது நேற்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது, கனடாவைச் சேர்ந்தவர், மல்லாகம் நீதிமன்ற வளாகத்தில் வைத்து எதிர் தரப்பு சட்டத்தரணியுடன் தகராறில் ஈடுபட்டு, அவரை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.
இந்நிலையில், சட்டத்தரணி தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததையடுத்து கனடாவை சேர்ந்த நபரை தெல்லிப்பழை பொலிஸார் கைது செய்து பின்னர் பிணையில் செல்ல அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டி திருமண பிரச்சனையில் நிலா சோழனுடன் வாழ்வது குறித்து எடுத்த அதிரடி முடிவு... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
எப்ஸ்டீன் கோப்புகளில் அறிவியலாளரின் முகம் சுழிக்கும் புகைப்படம்: கோபத்துடன் விளக்கமளித்த குடும்பம் News Lankasri