கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் நடைபெறவிருந்த பரீட்சைகள் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பு
கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் நடைபெறவிருந்த பரீட்சைகள் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை வளாகத்தின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை வளாகத்தில் குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் 324 பேருக்கு அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இப் பரிசோதனையில் 36 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தில் தங்கியிருந்த மாணவர்களுக்கே அதிக அளவில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அம் மாணவர்கள் அதே விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், மாணவர்களுக்கு பரீட்சைகள் இடம்பெற இருந்த நிலையில் பரீட்சைகள் நடாத்துவது குறித்து சுகாதார ஆலோசனைகளை வழங்கி உள்ளதாகவும் குச்சவெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மாணவர்கள் 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி!
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam