கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மாணவர்கள் 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி!
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மாணவர்கள் 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காய்ச்சல், இருமல் காரணமாக நேற்றிரவு (15) திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு வருகை தந்தபோது மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையின் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஏற்கனவே அங்கு சில மாணவர்களுக்கு கோவிட் தொற்று பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், மீண்டும் திருகோணமலையில் தொற்று பரவி வருவதால் கடுமையாக சுகாதார
வழிமுறைகளை பின்பற்றுமாறும் சுகாதாரத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
உலகக் கோப்பை நடுவர் செய்த கைசைகை., FIFA-விற்கு இனவெறி கண்காணிப்பு அமைப்பு விடுத்த கோரிக்கை News Lankasri