கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மாணவர்கள் 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி!
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மாணவர்கள் 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காய்ச்சல், இருமல் காரணமாக நேற்றிரவு (15) திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு வருகை தந்தபோது மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையின் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஏற்கனவே அங்கு சில மாணவர்களுக்கு கோவிட் தொற்று பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், மீண்டும் திருகோணமலையில் தொற்று பரவி வருவதால் கடுமையாக சுகாதார
வழிமுறைகளை பின்பற்றுமாறும் சுகாதாரத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 8 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan