நாடாளுமன்றில் ஈஸ்டர் தாக்குதல் விவாதம்: நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர முடிவு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையின்படி, எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த விவாதம் நடத்தப்படவுள்ளது.
அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்துள்ள ஈரான்! போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு
ஈஸ்டர் தாக்குதல் விவாதம்
நாடாளுமன்றம் இன்று(07.04.2026) முதல் இந்த வாரம் மூன்று நாள்களுக்குக் கூடவுள்ளது. அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பொது விடுமுறை காரணமாக நாளை புதன்கிழமை சபை அமர்வு நடைபெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதம் எதிர்வரும் வியாழக்கிழமை பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறும். அத்தோடு எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடத்தப்படவுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னாலுள்ள சூத்திரதாரிகளைக் கண்டறிவது தொடர்பாக அண்மைக்காலமாக எழுந்துள்ள அரசியல் சர்ச்சைகள் மற்றும் புதிய வெளிப்பாடுகள் குறித்து இந்த விவாதத்தின் போது விரிவாக ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.