70 இலட்சம் ரூபா பேராசையால் சட்டத்தரணி பதவியை இழப்பார் திலீப பீரிஸ்! கம்மன்பில பகிரங்க எச்சரிக்கை

Sri Lanka Udaya Gammanpila Money
By Rakesh Jul 06, 2026 11:46 AM GMT
Report

இலங்கை இராணுவத்தின் மிகச்சிறந்த வீரரான லெப்டினன்ட் சாந்த ஜயதிலக, யுத்தக் களத்தில் ஆற்றிய அர்ப்பணிப்புகளுக்காக 'வீர விக்ரம விபூஷண' மற்றும் 'ரணசூர' உள்ளிட்ட 7 பராக்கிரம பதக்கங்களை வென்றவராவார்.

கடந்த யுத்த காலத்தில் உயிருடன் இருக்கும் போதே ஒரு இராணுவ வீரரினால் பெறப்பட்ட மிக உயர்ந்த விருதான 'வீர விக்ரம விபூஷண' விருதை கொச்சைப்படுத்தும் வகையில், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் அவமதிப்பாகப் பேசியுள்ளார் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.

மைதானத்தில் கதறி அழுது கண்ணீருடன் விடைபெற்றார் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர்..!

மைதானத்தில் கதறி அழுது கண்ணீருடன் விடைபெற்றார் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர்..!

கம்மன்பில பகிரங்க எச்சரிக்கை

எதுல்கோட்டேயிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று(6) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில்,

70 இலட்சம் ரூபா பேராசையால் சட்டத்தரணி பதவியை இழப்பார் திலீப பீரிஸ்! கம்மன்பில பகிரங்க எச்சரிக்கை | Dilip Peiris Lose Position Lawyer 7 Million Rupees

"மேலதிக சொலிசிட்டர் ஜெனரலுக்கு எனத் தனிப்பட்ட சட்ட அதிகாரம் எதுவும் இல்லை. அவர் சட்டமா அதிபரின் பிரதிநிதியாகவே நீதிமன்றில் முன்னிலையாகின்றார்.

ஜனாதிபதியினால் முறையாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டு இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்ட கௌரவ பதக்கங்களையே, அரசின் கீழ் பணியாற்றும் ஒரு அதிகாரி 'தகடுத் துண்டுகள்' எனக் கூறி அவமதித்துள்ளார்.

யுத்தக் களத்தில் உயிரைப் பணயம் வைத்துப் பெற்ற இத்தகைய பதக்கங்களை, அரசின் கைக்கூலியாகச் செயற்பட்டு இராணுவ வீரர்களை அவமதிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை திலீப பீரிஸுக்கு நினைவூட்டுகின்றேன். சாந்த ஜயதிலகவின் சீருடையில் இருந்த 7 பதக்கங்களையும் சுட்டிக்காட்டி ஜனாதிபதி அண்மையில் நாடாளுமன்றத்தில் ஒரு கருத்தைக் கூறியிருந்தார்.

நீதிபதிகளின் ஓய்வு வயது விவகாரத்தில் சஜித் பிரேமதாச அரசாங்கத்துடன் ரகசிய டீல்! கட்சிக்குள் பலத்த ஐயம்

நீதிபதிகளின் ஓய்வு வயது விவகாரத்தில் சஜித் பிரேமதாச அரசாங்கத்துடன் ரகசிய டீல்! கட்சிக்குள் பலத்த ஐயம்

சட்டத்தரணி பதவியை இழப்பார்

'ஒரு தகடு அடித்துவிட்டுச் சென்றாலும் 10 இலட்சம் வழங்கப்படும்' என ஜனாதிபதி கூறியிருந்ததை மனதில் வைத்து, இந்த 7 பதக்கங்களுக்கும் சேர்த்து 70 இலட்சம் ரூபாவை ப் பெற்றுக்கொள்ளும் பேராசையில்தான் திலீப பீரிஸ் இவ்வாறு இராணுவ வீரர்களை அவமதித்தாரோ என்ற நியாயமான சந்தேகம் எழுகின்றது.

உயர் நீதிமன்ற விதிகள் 53 மற்றும் 54 இன் படி, ஒரு சட்டத்தரணி நீதிமன்றில் வாதிடும் போது சந்தேகநபர்களையோ அல்லது மூன்றாம் தரப்பினரையோ அவமதிக்கும் வகையில் பேசக்கூடாது.

70 இலட்சம் ரூபா பேராசையால் சட்டத்தரணி பதவியை இழப்பார் திலீப பீரிஸ்! கம்மன்பில பகிரங்க எச்சரிக்கை | Dilip Peiris Lose Position Lawyer 7 Million Rupees]

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. திலீப பீரிஸ் இந்த விதிகளை மீறியுள்ளதால், அவரது சட்டத்தரணி தொழிலை இரத்துச் செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதற்கான பின்னணி தற்போது உருவாகியுள்ளது.

நல்லாட்சி அரச காலத்தில் தமக்கு எதிராகத் தொடரப்பட்ட போலி வழக்கின் போது, அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் விகாரை நிகழ்வொன்றில் பங்கேற்க தமக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரிய போது, திலீப பீரிஸ் அதனை 'நாட்டை விட்டுத் தப்பியோடும் சதி' எனக் கூறி நீதிமன்றில் எவ்வாறு அவமானப்பட்டார் என்பதையும் இந்த இடத்தில் நினைவூட்ட விரும்புகின்றேன்.

நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு அவசரமாக வந்த உலங்குவானூர்தி.. கதறி அழும் உறவினர்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு அவசரமாக வந்த உலங்குவானூர்தி.. கதறி அழும் உறவினர்கள்

கடுமையான நெருக்கடி

அதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பலர் உயிரிழந்து, மேலும் பலர் காயமடைந்த சம்பவத்துக்கு அதிகாரிகளையோ அல்லது கைதிகளையோ மட்டும் குறை கூற முடியாது. சிறைச்சாலைகளுக்குள் நிலவும் கடுமையான நெருக்கடியே இந்த மோதல்களுக்கு முக்கிய காரணமாகும். சிறைச்சாலைகளின் மொத்தக் கொள்ளளவு 10 ஆயிரத்து 395 கைதிகள் ஆகும். ஆனால், 2026 ஜூன் 29 நிலவரப்படி அங்கு 42 ஆயிரத்து 34 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

70 இலட்சம் ரூபா பேராசையால் சட்டத்தரணி பதவியை இழப்பார் திலீப பீரிஸ்! கம்மன்பில பகிரங்க எச்சரிக்கை | Dilip Peiris Lose Position Lawyer 7 Million Rupees

இதன்படி, சிறைச்சாலைகளின் கொள்ளளவை விட நான்கு மடங்கு அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் கழிவறை வசதிகள், உணவு, உறங்குமிடம் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக்கொள்வதில் கைதிகளுக்கு இடையே நாளாந்தம் மரணப் போராட்டம் நிலவுகின்றது. இது கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் ஆகிய இருதரப்பினரையும் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 2022 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கைதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ள போதிலும், சிறைச்சாலைகளின் கொள்ளளவில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

இதற்குத் தீர்வாக சிறைச்சாலைகளை அதிகரிப்பதை விடுத்து, நீதிமன்றங்களின் எண்ணிக்கையையும் திறனையும் அதிகரிக்க வேண்டும். உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொடவின் தரவுகளின்படி, இலங்கையில் ஒரு நீதிமன்றத்தில் சராசரியாக 3 ஆயிரத்து 303 வழக்குகள் விசாரணையில் உள்ளன.

பொலிஸாரிடம் முறைப்பாடு 

பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதில் இருந்து தீர்ப்பு வழங்கப்பட சராசரியாக 10 வருடங்களும் இரண்டு மாதங்களும் ஆகின்றன. மேல்முறையீடுகள் செய்யப்பட்டால் இந்தக் காலம் மேலும் நீடிக்கும்.

வழக்குகள் தாமதமாவதற்குச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகள் தாமதமாதல் மற்றும் அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கை தாமதமாதல் ஆகிய இரு முக்கிய காரணங்கள் உள்ளன.

70 இலட்சம் ரூபா பேராசையால் சட்டத்தரணி பதவியை இழப்பார் திலீப பீரிஸ்! கம்மன்பில பகிரங்க எச்சரிக்கை | Dilip Peiris Lose Position Lawyer 7 Million Rupees

எனவே, அரசு இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி இந்த அறிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். தற்போதைய சிறைக்கைதிகளில் 75 சதவீதமானோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளாவர். வழக்குகளை விரைவுபடுத்தி தீர்ப்புகளை வழங்கும் போது சிறைச்சாலைகள் தானாகவே காலியாகும். நீதி விரைவாக நிலைநாட்டப்படும் போது மக்கள் சட்டத்துக்குப் பயந்து குற்றச் செயல்கள் குறையும்."  என்றார்.

மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US