நீதித்துறைக்குள் அரசின் நேரடி அரசியல் தலையீடு : நிரோஷன் பாதுக்க கடும் குற்றச்சாட்டு

Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka Ministry of justice Sri lanka NPP Government
By Rakesh Jul 06, 2026 05:38 AM GMT
Report

உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதன் மூலம், தற்போதைய திசைகாட்டி அரசு நீதித்துறைக்குள் நேரடி அரசியல் தலையீடுகளை மேற்கொள்ள முயற்சிக்கின்றது என்று ஊழல் எதிர்ப்பு முன்னணியின் அழைப்பாளர் நிரோஷன் பாதுக்க கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முதன்மைக் காரியாலயத்தில் நேற்று(05.07.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்! பலர் காயமடைந்துள்ளதாக தகவல் - விசேட அதிரடிப்படையினர் குவிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்! பலர் காயமடைந்துள்ளதாக தகவல் - விசேட அதிரடிப்படையினர் குவிப்பு

உயர் அதிகாரிகளின் ஓய்வுபெறும் வயது

மேலும் தெரிவிக்கையில், "நமது நாட்டின் 1972 மற்றும் 1978ஆம் ஆண்டு அரசமைப்புகளின்படி, உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் 65 வயதிலும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஒருவர் 63 வயதிலும் ஓய்வுபெற வேண்டும் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதித்துறைக்குள் அரசின் நேரடி அரசியல் தலையீடு : நிரோஷன் பாதுக்க கடும் குற்றச்சாட்டு | Niroshan Pathukka Strongly Accuses Government

எனினும், தற்போதைய அரசு இந்த ஓய்வுபெறும் வயதை மேலும் நீடிப்பதற்குத் திடீர் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்க்கட்சியில் இருந்தபோது இது குறித்து எந்தவொரு கருத்தையும் வெளியிட்டிருக்கவில்லை.

அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தின்படி, பிரதம நீதியரசர் உள்ளிட்ட உயர்நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை 11 இலிருந்து 19 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை 12 இலிருந்து 20 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.

ஆனால், கடந்த சில மாதங்களில் மட்டும் நீதித்துறை அமைப்பில் 8 நீதியரசர்கள் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த வெற்றிடங்களுக்கான தகுதியான பெயர்களை ஜனாதிபதி இதுவரை அரசமைப்பு சபைக்குப் பரிந்துரைக்கவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில், நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கே ஜனாதிபதி தலைமையிலான அரசு முன்னுரிமை வழங்கி வருகின்றது.

எதிர்வரும் நவம்பர் மாதத்துடன் தற்போதைய பிரதம நீதியரசர் ஓய்வுபெற வேண்டும். ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதாயின், அது ஏன் உயர்நீதிமன்ற நீதியரசர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட வேண்டும்? நாட்டின் நீதிவான் நீதிமன்ற நீதிவான்கள், மேல் நீதிமன்ற நீதிபதிகள், மருத்துவர்கள் மற்றும் அரச சேவையின் ஏனைய உயர் அதிகாரிகளின் ஓய்வுபெறும் வயதும் அதிகரிக்கப்பட வேண்டும் அல்லவா?

முதல் தடவையாக முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு விரைவில் தடுப்புக் காவல்

முதல் தடவையாக முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு விரைவில் தடுப்புக் காவல்

பிரதம நீதியரசரின் பதவிக்காலம்

பிரதம நீதியரசர் ஓய்வுபெறுவதால் நாட்டின் நீதித்துறை கட்டமைப்பு ஒருபோதும் வீழ்ச்சியடைந்துவிடாது. ஆனால் அவரது பதவிக்காலத்தை அரசியல் தேவைகளுக்காக நீடிப்பது நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்குக் கடுமையான மற்றும் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தும்.

நீதித்துறைக்குள் அரசின் நேரடி அரசியல் தலையீடு : நிரோஷன் பாதுக்க கடும் குற்றச்சாட்டு | Niroshan Pathukka Strongly Accuses Government

தற்போது நீதித்துறை முறைமையானது அரசியல்மயப்படுத்தப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை நீடிக்க வேண்டிய தேவை நாட்டு மக்களுக்கு இல்லை, அது தற்போதைய அரசுக்கே உள்ளது. அரசின் கொள்கைப் பிரகடனத்தில் உள்ள விடயங்களைச் செயல்படுத்துவதற்காகவே மக்கள் இந்த அரசுக்குப் பெரும்பான்மை பலத்தை வழங்கினார்களே தவிர, அரசமைப்பைத் திருத்தி நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அல்ல.

எனவே, ஜனாதிபதியும் அரசும் நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு விடுக்கும் இந்த சவால்களுக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தியும் அதன் சட்டத்தரணிகள் சங்கமும் இணைந்து சட்ட ரீதியான மற்றும் அரசியல் ரீதியான அனைத்துப் போராட்டங்களையும் நாடெங்கிலும் முன்னெடுக்கும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு வரும் பசில் ராஜபக்ச தொடர்பில் மகிந்த வெளியிட்ட முக்கிய தகவல்

இலங்கைக்கு வரும் பசில் ராஜபக்ச தொடர்பில் மகிந்த வெளியிட்ட முக்கிய தகவல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தொடர்பில் வெளியான தகவல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தொடர்பில் வெளியான தகவல்

11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US