நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு விஜயம்
புதிய இணைப்பு
நீதி அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார சற்று நேரத்திற்கு முன்பு நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு நேரில் சென்றுள்ளார்.
இன்று காலை (06) சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.

அமைச்சருடன் சிறைச்சாலைகள் திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் பலரும் சென்றுள்ளனர்.
சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற மோதல் தொடர்பான முழுமையான விபரங்களைத் தெரிந்து கொள்ளவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கிலும் அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவின் விஜயம் அமைந்துள்ளது.
சிறைச்சாலை மோதல் தொடர்பில் நீதி அமைச்சின் கண்காணிப்பில் சுயாதீன விசாரணைக்குழுவொன்றை அமைக்கவும் நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார உத்தேசித்துள்ளார்
முதலாம் இணைப்பு
கடந்த இரண்டு நாட்களாக கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இடையே பலத்த மோதல் நடைபெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு முக்கிய அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய தீர்மானித்துள்ளனர்.
நீதி அமைச்சர் அல்லது வேறொரு முக்கிய அமைச்சரின் தலைமையில் குறித்த குழுவினர் நீர்கொழும்புக்கு செல்லவுள்ளனர்.
முக்கிய அமைச்சர்கள்
இதன்போது சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் மோதலுடன் தொடர்புபடாத சிறைக் கைதிகள் தரப்பு ஆகியோரைச் சந்தித்து விபரங்களைக் கேட்டறியவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நீதி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணையொன்றை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.