புதிய சர்ச்சையை ஏற்படுத்திய வைத்தியர் அர்ச்சுனா
ஓர் இரு இடை வைத்திய அதிகாரிகள் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அழுத்தத்தினால் என்னை போராதனை வைத்தியசாலைக்கு மாற்ற தயாராகி வருகின்றனர். ஆனால் நான் அதை ஏற்க போவதில்லை என வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தினை அவர் இன்று(19) தனது முகநூல் பக்கத்தில் நேரலையின் மூலம் பதிவிட்டுள்ளார்.
மேலும், நான் இன்னொரு வைத்தியசாலையை பொறுப்பு எடுக்கவும் இல்லை இனி எடுக்கப் போவதும் இல்லை. மாறாக பலவந்தமாக இன்னொரு வைத்தியசாலையை பொறுப்பேற்க சொல்வார்கள் ஆனால் நீதிமன்றத்தில் அது தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வேன்.
தொழிற்சங்க நடவடிக்கை மூலம் ஒருவருடைய வேலையை பறிக்க முடியாது. ஒரு திணைக்களத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் தற்காலிகமாக அமைச்சிற்கு அழைக்கப்படுவது வழக்கம்.
இவ்வாறு என் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் நிறுபிக்கப்பட்டாத விடத்து மறுபடியும் சாவகச்சேரி வைத்தியசாலை வருவேன். அது தான் சட்டம் என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri

ரஷ்யா, சீனாவுடன் ஆயுதப்போட்டி ஏற்படும் அச்சம்: அதிர்ச்சியூட்டும் உத்தரவை பிறப்பித்த செயலாளர் News Lankasri
