கூற்றை நிரூபித்தால் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக டில்சான் விடுத்துள்ள சவால்
தாம், இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என்ற கூற்றை நிரூபிக்குமாறு மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவுக்கு, முன்னாள் கிரிக்கட் வீரரும், ஐக்கிய ஜனநாயக குரல் வேட்பாளருமான திலகரட்ன டில்சான், சவால் விடுத்துள்ளார்.
தனது குடியுரிமையை கேள்விக்குள்ளாக்கியதற்காக, திலித் ஜயவீரவை கடுமையாக சாடியுள்ள திலகரத்ன டில்சான், ஜயவீர, அவரின் கூற்றை நிரூபிக்க முடிந்தால், தாம் தேர்தல் முயற்சியில் இருந்து விலகத் தயார் என்று கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், ஜயவீர அவ்வாறு செய்யத் தவறினால், அவர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிக்க வேண்டும் என்றும் டில்சான் தெரிவித்துள்ளார்.
பழைய அரசியல் கலாசாரம்
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திலகரத்ன டில்சான், இதற்கு முன்னர் ஜயவீர, அவரது அரசியல் கட்சியில் இணைவதற்கான அழைப்பை தமக்கு விடுத்த போது, தமது குடியுரிமை குறித்து அவருக்கு தெரியாமல் இருந்ததா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜயவீர, தம்மை அவரது கட்சியில் இணைந்து களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட அழைத்தார். முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க ஊடாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.
எனினும், தற்போது அவர் சேறு பூசும் பழைய அரசியல் கலாசாரத்தையே இன்னும் பின்பற்றுவது வருத்தமளிக்கிறது என்று டில்சான் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam