ஈரானின் பாதுகாப்பு துறையை வேரறுக்கத் திட்டமிடும் இஸ்ரேலிய புலனாய்வு
ஈரானின் பாதுகாப்புத் துறையை அடியோடு வேரறுக்க இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) இன்னும் மூன்று வார கால தீவிர இராணுவ நடவடிக்கைக்குத் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவுடன் இணைந்த இந்த கூட்டு நடவடிக்கை, எதிர்பார்க்கப்பட்டதை விட அதிவேகமாக நகர்ந்து வருவதாக IDF தகவல்கள் வெளியாகியுள்ளன.
போர் பதற்றம் ஆரம்பமானதிலிருந்து, இதுவரை ஈரானிய முக்கிய இலக்குகளை துவம்சம் செய்துள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை கூறுகின்றது.
3 Weeks Operations
இது தொடர்பில், "எங்களுக்கு முன்னால் ஆயிரக்கணக்கான இலக்குகள் உள்ளன" என்று ஐடிஎஃப் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின் தெரிவித்தார்.

"எங்கள் அமெரிக்க நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து, குறைந்தபட்சம் யூத விடுமுறையான பஸ்கா பண்டிகை வரை, மூன்று வாரங்களுக்குப் பிறகு, திட்டங்களுடன் நாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்கு அப்பாலும் மூன்று வாரங்களுக்கு கூட ஆழமான திட்டங்கள் எங்களிடம் உள்ளன." எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
முந்தைய போரின் போது, ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் "இருத்தலியல் அச்சுறுத்தலை" எதிர்கொள்ள இஸ்ரேல் முயன்றது, அதே போல் அதன் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் அதிகரித்த உற்பத்தியையும் எதிர்கொண்டது.
தற்போதைய போர் இஸ்ரேலுக்கு "இருத்தலியல் ஈரானிய அச்சுறுத்தலை" நீக்குவது மட்டுமல்லாமல், யூத அரசின் மீதான ஈரானின் "மூலோபாய அச்சுறுத்தலை" "எதிர்காலத்தில்" அகற்றுவதற்கான வாய்ப்பை IDFக்கு வழங்கியுள்ளது என்று அவர் கடுமையாக குறிப்பிட்டுள்ளார்.