மலையகத்தின் அடிமை விலங்கை உடைத்தெறிய தயாராகும் அநுர
மலையகத்திலுள்ள கல்வி கற்றவர்களுக்கு அங்கேயே தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுத்து அவர்களை பொருளாதார ரீதியில் ஸ்திரப்படுத்துவதே தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என அக்கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் வைத்தியர் ஆறுமுகம் ஜெயராஜன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ”மலையகமானது, இதுவரை நிலையான ஒரு அபிவிருத்தியை நோக்கி செல்லவில்லை என்பதே எமது நிலைப்பாடாக இருக்கின்றது.
முக்கியமாக, பொருளாதார வளர்ச்சி, கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்மைப்பு வசதிகள் ஆகியனவற்றில் மலையக மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து கொண்டிருக்கின்றார்கள்.
எனவே, எம்மிடம் இருக்கும் வளங்களை சரியான முறையில் பயன்படுத்தாமையே நாட்டினை ஒரு வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவிடாமல் செய்கின்றது. அதே காரணம் தான் மலையகத்தின் வளர்ச்சிக்கும் தடையாக இருக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது,
அந்த மக்களின் ஊடுருவலால் ஐரோப்பா சீரழியுது: அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கடும் விமர்சனம் News Lankasri
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri