இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
இலங்கை மத்திய வங்கி, மே மாத உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் தொடர்பில் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி,2025 மே மாத இறுதியில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 6,284 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொலர் கையிருப்பு
இது, 2025 ஏப்ரல் மாத இறுதியில் பதிவான 6,327 மில்லியன் அமெரிக்க டொலர் கையிருப்பு சொத்துக்களுடன் ஒப்பிடும்போது 0.7% வீழ்ச்சியாகும்.
இதற்கிடையில், இலங்கை மத்திய வங்கி 2025 மே மாதத்தில் உள்நாட்டு அந்நிய செலாவணி சந்தையில் இருந்து 260.8 மில்லியன் டொலர்களை வாங்கி 4 மில்லியன் டொலர்களை விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2025 மே மாதத்தில் உள்நாட்டு அந்நிய செலாவணி சந்தையில் இருந்து மத்திய வங்கி வாங்கிய டொலர்களின் நிகர தொகை 256.8 மில்லியன் டொலர்கள் ஆகும்.

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
