ஈ.பீ.டீ.பி- தமிழரசு கட்சி இணைவு: முறிந்து வெளியேறும் புதிய தலைமை
ஈழத்தமிழர் அரசியல் ஒரு பாதகமான முடிவை ஏற்றிருப்பதாகவும் தமிழ்த்தேசியத்தை குழிதோண்டி புதைத்திருப்பதாகவும் தமிழர் தரப்பு ஒரு அதிர்வு நிலையை வெளிப்படுத்தி நிற்கிறது.
தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே சிவஞானம் ஈ.பீ.டீ.பி யின் அலுவலகத்தில் அதன் செயலாளரை ஆசனப்பங்கீடு தொடர்பில் சந்திருப்பது ஒரு தமிழின துரோக சம்பவமாகவும் அதேநேரம் நீண்ட தியாகங்களை தன்னகத்தே கொண்ட தமிழரசின் வரலாற்றில் ஒரு கறையாகவும் மாறியுள்ளது.
தமிழரசுக்குள் ஏற்படப்படப போகும் பிளவு , சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்வாரா சிறீதரன் போன்ற கேள்விகளுக்கு விடையாகவும் அதே நேரம் எதேச்சதிகார தலைவர்களாக தங்களை வெளிப்படுத்தும் சுமந்திரன் போன்றவர்களுக்கு தமிழ் மக்கள் எப்படியான முடிவுகளை வழங்கப்போகிறார்கள்?
இவர்கூட்டிணைந்த தரப்பின் தமிழர் விரோத செயற்பாடுகளிலும் ஆராய்ந்து தமிழர்கள் எப்படியாக இப்போது சிந்திக்க வேண்டும் என்பது தொடர்பிலும் நம்பி வாக்களித்த மக்களின் மனநிலையை அடகு வைத்து ஒரு அரசியல் வறட்சியை உண்டுபண்ணிவிட்ட தமிழரசின் சந்தரப்பவாத அரசியல் தொடர்பில் மக்கள் கொண்டுள்ள மனவலிகளையும் ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு..

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
