வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதிபதி இளஞ்செழியன்! சூடுபிடிக்கும் அரசியல்
அரசியலுக்குள் வருவதற்கு தனக்கு தேவையுமில்லை விருப்பமும் இல்லையென முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
இளஞ்செழியன் எனக்கு சகோதரர் போன்றவர், அவருடன் நான் அரசியல் தொடர்பாக பல தடவைகள் பேசியுள்ளேன்.
முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் அரசியலுக்குள் வருவதாக இருந்தால் அவர் கொள்கை ரீதியாக சரியானதொரு நிலைபாட்டை எடுக்க வேண்டும். அப்படியாயின் நிச்சயமாக எங்களுடைய அமைப்பிலேயே அவருக்கொரு இடம் இருக்கும்.
எங்களுடன் கொள்கை விடயத்தில் ஒத்துக்கொண்டால் நாங்களும் அவர்களுடன் இணைந்து பயணிப்போம்” என குறிப்பிட்டார்.
விரிவான விளக்கங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...
