வட சீனாவில் மண் சரிவு: 5 பேர் உயிரிழப்பு
வட சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஏற்பட்ட மண் சரிவில் வீடு ஒன்று புதையுண்டதில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் காயமடைந்துள்ளனர் என சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா இன்று(25) செய்தி வெளியிட்டுள்ளது.
ஹாங்டோங் கவுண்டியில் உள்ள ஹாவோயி கிராமத்தில் ஏற்பட்ட இந்த மண் சரிவில் சிக்கிய 8 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அவசரக்கால முகாமைத்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது.
எமது கடவுச்சீட்டிற்குப் பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது! ஒரு நாடாக நாம் முன்னோக்கி வருகிறோம் - அமைச்சர் நளிந்த
மண்சரிவில் சிக்கி ஐவர் உயிரிழப்பு
மீட்கப்பட்டவர்களில் 5 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதுடன் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சீரான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை(24) மாலை 6:49 மணியளவில் ஏற்பட்ட இந்த மண் சரிவு வீட்டின் மீது விழுந்து அதை மூடியுள்ளது.

சம்பவ இடத்தில் பொலிஸார், தீயணைப்புப் படையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் உட்பட 550-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், லோடர்கள், கிரேன்கள், ட்ரோன்கள் மற்றும் உயிர் கண்டறியும் கருவிகள் உட்பட 130க்கும் மேற்பட்ட உபகரணங்கள் மீட்புப் பணியில் பயன்படுத்தப்பட்டுள்ளன.