மத்திய கிழக்கில் உச்ச போர் பதற்றம் : லெபனான் விரையும் பிரித்தானிய போர்க்கப்பல்கள்
மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, லெபனானில் வாழும் பிரித்தானியர்களை அங்கிருந்து அழைத்துவருவதற்காக பிரித்தானிய போர்க்கப்பல்களும், உலங்கு வானூர்திகளும் அப்பகுதிக்கு விரைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், மத்திய கிழக்கு பகுதியில், பிரித்தானிய இராணுவத்தினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பிரித்தானிய இராணுவத்தினர்
ஏற்கனவே, லெபனானிலிருக்கும் பிரித்தானியர்களை அந்நாட்டிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் வலியுறுத்தியிருந்தது.
லெபானின் வாழும் பிரித்தானியர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட நிலையில், இதுவரை 3,000 பேர் தங்கள் பெயர்களை பதிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், மேலும் பல்லாயிரம் பிரித்தானியர்கள் லெபனானில் இருப்பதாக பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அவர்களில் பெரும்பாலானோர் நீண்ட காலமாக லெபனான் நாட்டில் வாழ்ந்துவருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan
