வாடகை வீடுகள் இல்லை - பணமும் இல்லை : அரசாங்கத்தின் அறிவிப்பால் ஏமாற்றமடைந்துள்ள மக்கள்
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மலையக மக்களுக்கு வாடகை வீடும் இல்லை, அதற்கு தருவதாக அரசாங்கம் கூறிய நிதியும் கிடைக்கவில்லை என்று சிவில் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே குற்றம் சுமத்தியுள்ளார்.
நுவரெலியாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
டித்வாவால் பாதிக்கப்பட்ட மலையக மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் எந்தவொரு தேவையையும் பூர்த்தி செய்யாமல் ரதல்ல பகுதிக்கு ஜனாதிபதி வருகைத் தந்து ஊடக நிகழ்ச்சியொன்றை நடத்திச் சென்றிருக்கின்றார்.
வாடகைப் பணம் எங்கே..
டித்வாவால் பாதிக்கப்பட்ட மக்கள் வாடகை வீட்டுக்குச் செல்லுமாறு அரசாங்கம் அறிவுறுத்தினாலும், வாடகை செலுத்த பணம் வழங்குவதற்கான ஒரு அமைப்பை இன்னும் அரசாங்கம் உருவாக்கவில்லை. வாடகை வீடும் இல்லை.
டித்வாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் என்று கூறப்பட்ட, ஒரு கோடி ரூபாவுக்கு வீடு கட்டியவர்கள், நிலம் வாங்கியவர்கள் அல்லது ஐம்பது லட்சத்தில் வீடு கட்டியவர்கள் என்று மலையகத்தில் இதுவரை யாரும் இல்லை.

இதுவரை அப்படியே எதுவுமே அறியாத மக்கள் மலையகத்தில் இருக்கின்றார்கள். இந்த மக்களுக்கு உதவுவதற்கு எதிர்க்கட்சிகள் எந்தக் குரலும் எழுப்பவில்லை.
அவர்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை, பிரதமரின் உடை, ஜனாதிபதியின் சட்டைப் பொத்தான் மற்றும் அவர்களுக்கு ஆங்கிலம் பேச முடியும் இல்லையான என்பது மட்டுமே. ஒரு அரசாங்கமாக மக்களுக்கு ஒரு தீர்வை வழங்குமாறு நாங்கள் வலியுறுத்துகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam