கொழும்பில் அதிகாலை கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்! தலைமறைவான கும்பல்
கொழும்பு - வெல்லம்பிட்டி, சாதம்வத்த பகுதியில் வீட்டிற்குள் நுழைந்த குழுவினரால் கூர்மையான தாக்குதலுக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த கொலை இன்று (27) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல்
கிராண்ட்பாஸ், சாதம்வத்த, ஒருகொடவத்த பகுதியை சேர்ந்த ஒருவரே வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத குழுவினால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் தற்காலிகமாக அந்த வீட்டில் வசித்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீட்டின் உரிமையாளர் தற்போது போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
பொலிஸார் விசாரணை
மேலும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இடையிலான தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் குறித்து கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam