எனது அன்புக்குரிய தாயின் மரணம் சோகமான தருணம்! சார்லஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு
பிரித்தானிய மகா ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்துள்ள நிலையில், ராணியின் மூத்த மகனும் வாரிசுமான சார்லஸ் பிரித்தானியாவின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சார்லஸ் தனது தாயார் இறந்ததைத் தொடர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மன்னரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

எனது அன்புக்குரிய தாய், மகா ராணியின் மறைவு, எனக்கும் எனது குடும்பத்தினர் அனைவருக்கும் மிகவும் சோகமான தருணம். “அன்பான இறையாண்மை மற்றும் மிகவும் நேசித்த தாயின் மறைவுக்கு நாங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம்.

"அவரது இழப்பு நாடு முழுவதும், மாநிலங்கள் மற்றும் காமன்வெல்த் மற்றும் உலகம் முழுவதும் உள்ள எண்ணற்ற மக்களால் ஆழமாக உணரப்படும் என்று எனக்குத் தெரியும். இந்த துயரம் மற்றும் மாற்றத்தினை நானும் எனது குடும்பமும் ஆறுதலால் நிலைத்திருப்போம் என்றும் அறிவித்துள்ளார்.
3 எம்.எல்.ஏக்கள் ஒரே குடும்பத்தில்.,அரசியலில் கால்பதிக்கும் லாட்டரி மார்டின் குடும்பம் News Lankasri
சன் டிவி சீரியலில் நாயகனாக நடிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகர்... யார், என்ன தொடர், முழு விவரம் Cineulagam