மகா ராணியின் மறைவினால் சோகத்தில் மூழ்கிய பிரித்தானியா! உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்
பிரித்தானிய மகா ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96 ஆவது வயதில் உயிரிழந்துவிட்டதாக பக்கிம்காம் அரண்மனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இது குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று பிற்பகல் பால்மோரலில் ராணி நிம்மதியாக உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரித்தானிய மகா ராணியின் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் மறைவு குறித்து செய்திகள் வெளியான நிலையில் பிரித்தானியா முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளதுடன்,அரண்மனையின் உச்சியில் இருந்த யூனியன் கொடி பிரித்தானிய உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணிக்கு அரைக்கம்பத்தில் இறக்கப்பட்டுள்ளது.