பிரேசிலில் விமான விபத்து: 7 பேர் பலி
பிரேசிலில் இடம்பெற்ற விமான விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்தானது நேற்று(28.01.2024) இடம்பெற்றுள்ளது.
பிரேசிலின் அண்டை நாடான சாவ்பாலோ காம்பினாவில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் பிரேசிலின் தென்கிழக்கு மினாஸ்ரைசுக்கு பயணத்தை ஆரம்பித்துள்ளது.
மீட்பு பணி
இதன்போது பிரேசிலின் சுரங்க நகரமான இட்டா பேலா மீது விமானம் வானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியுள்ளது.

இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த விமானி உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது வரை இறந்த 3 பேரின் உடல்களை மீட்பு படையினர் மீட்டுள்ளதோடு மற்றவர்களின் உடல்களை தேடும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் துணையாக இருப்பேன்..ஆனால் மோடி இருந்தால்தான் - ட்ரம்ப் News Lankasri
ரொனால்டோவுக்கு அதிர்ச்சி கொடுத்த டிஆர் காங்கோ: ஃபிபா உலகக்கிண்ணத்தில் ரசிகர்கள் ஏமாற்றம் News Lankasri