திருகோணமலையில் தொடருந்தில் மோதி சிறுவன் பலி
திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் தொடருந்துடன் மோதி சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவமானது இன்று (11.02.2024) இடம்பெற்றுள்ளது.
இதன் போது முள்ளிப்பொத்தானை யூனிட் 07 பகுதியை சேர்ந்த 14 வயதுடைய நளீம் முஹம்மது சப்ரிட் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த தொடருந்துடன் சிறுவன் பாலத்துக்கு அருகில் சக நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த சிறுவனின் சடலம் கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |