பொரளை விபத்து: சந்தேகநபரின் வைத்திய பரிசோதனையில் வெளிவந்த தகவல்
கொழும்பு பொரளையில் இன்று(28) காலை இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய கிரேன் வாகன சாரதி மீது நடத்தப்பட்ட வைத்திய பரிசோதனையில் அவர் கஞ்சா போதைப்பொருளை பாவித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த கிரேன் வாகனத்தின் உரிமையாளரும் சற்று முன்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கிரேன் வாகனத்தின் உரிமையாளர் மற்றும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சாரதியை நாளையதினம் புதுக்கடை நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பிரேக் கட்டமைப்பு செயலிழப்பு
ராஜகிரியவிலிருந்து பௌத்தலோக மாவத்தை நோக்கிச் சென்ற கிரேன் வாகனமொன்று பொரளையில் நிறுத்தப்பட்டிருந்த ஆறு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மூன்று கார்களுடன் மோதியது.
இதன்போது, 62 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததுடன் 7 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
கிரேன் வாகனத்தின் பிரேக் கட்டமைப்பு செயலிழந்ததும் வாகனம் அதிவேகமாக செலுத்தப்பட்டதுமே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - ராகேஷ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





1000 கிமீ தூரத்தை அடையும் சீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை: இந்தியா உள்பட பல நாடுகளுக்கு எச்சரிக்கை News Lankasri

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam
