மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இரத்ததான முகாம்
தாய் நாட்டின் சமாதானம் கருதி உயிர் நீத்த இலங்கையர்களை நினைவு கூர்ந்தும்,உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இரத்ததான முகாம் இடம்பெற்றுள்ளது.
இராணுவத்தின் 543 ஆவது படைப்பிரிவு ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் இன்று சனிக்கிழமை (14) காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.
இரத்த தானம்
இதன்போது, தள்ளாடி,கள்ளியடி,மாதோட்டம்,பேசாலை ஆகிய இராணுவ முகாம்களை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவ சிப்பாய்கள் இரத்த தானம் செய்துள்ளனர்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியின் உதவியுடன் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஆசாத் எம். கணீபா,மன்னார் நகர பிரதேச செயலாளர் எம்.பிரதீப்,மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் உதவி பணிப்பாளர் வைத்தியர் கில் றோய் பீரிஸ்,மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட்,தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி மேஜர் ஜெனரல் சமந்த விஜயரத்தின, உள்ளடங்களாக இராணுவ அதிகாரிகள்,வைத்தியர்கள்,இராணுவத்தினர்,வைத்தியசாலை பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan

ஈரானை தாக்கிய இஸ்ரேல்... அமெரிக்காவை எச்சரிக்க சுவிஸ் தூதரை அழைத்த ஈரான்: காரணம் என்ன? News Lankasri
