அறுகம் குடா பதற்றத்தின் பின்னணி - மறைகரமாக செயற்பட்ட கும்பல் அம்பலம்
அறுகம் குடா(Arugam Bay) பிரதேசத்தில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இது தீவிரவாத குழுவினால் திட்டமிடப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அரசாங்க பிரதிநிதிகள் அமெரிக்க பிரதிநிதிகளிடம் இதனை தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா மற்றும் ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தலைவர்களை சந்தித்து இது குறித்து கலந்துரையாடினர்.
தீவிரவாத வலையமைப்பு
இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேர் உட்பட தலைவர்கள் மற்றும் குழுவை வழிநடத்திய ஈரான் பிரஜை உள்ளிட்ட தலைவர்கள் இந்த வலையமைப்பு தீவிரவாத வலையமைப்புடன் இணைக்கப்படவில்லை என பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான பிரதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவாக செயற்பட்ட ஒரு கும்பலின் முயற்சியே என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பயண ஆலோசனை
இந்த விவாதத்தில் கலந்து கொண்ட இலங்கைப் பிரதிநிதிகள் அமெரிக்கப் பிரதிநிதிகளிடம், தீவிரவாதக் கருத்துக்காக இப்படியொரு குழு எப்படி தம்மைக் கொல்ல முடியும் என்று கேட்டனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் பயண ஆலோசனை ஏன் விதிக்கப்பட்டது என்றும் அமெரிக்க பிரதிநிதிகளிடம் இலங்கை பிரதிநிதிகள் வினவியுள்ளதாக தெரியவந்துள்ளது.
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri