அனுராதபுரத்தில் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை
அனுராதபுரம், சாலியபுர - தெப்பங்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
திடீரென ஏற்பட்ட தர்க்கம்
வீட்டின் உரிமையாளருக்கும், வீட்டுக்கு வருகை தந்த நபர் ஒருவருக்கும் இடையில் திடீரென ஏற்பட்ட தர்க்கம் பின்னர் மோதலாக மாறியுள்ளது.

இதன்போது ஆத்திரமடைந்த வீட்டு உரிமையாளர், கூரிய ஆயுதத்தால் அந்த நபரைத் தாக்கியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சாலியபுர பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸார் தீவிர விசாரணை
இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய வீட்டு உரிமையாளரை அனுராதபுரம் பொலிஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 19 மணி நேரம் முன்
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan