இலங்கையை உலுக்கிய டித்வா புயல்: மண்ணில் புதையுண்ட பலர்! அதிகாரிகள் வெளியிட்ட தகவல்
நாட்டை தாக்கிய டித்வா சூறாவளியினால் காணாமல்போன 173 பேரை, இதுவரையிலும் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி, இலங்கையின் தென் கடற்பரப்பில் உருவான குறைந்த அழுத்தம் நவம்பர் 27 ஆம் திகதி சூறாவளியாக மாறியது.
22 மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு
இந்த சூறாவளியினால் நாட்டின் 22 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், சுமார் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இலங்கை வரலாற்றில் இயற்கை அனர்தத்தினால் ஏற்பட்ட அதிகூடிய உயிரிழப்பாக பதிவாகியிருந்ததுடன், அதிகமான மரணங்கள் மத்திய பகுதியிலுள்ள பதுளை மாவட்டத்தில் பதிவாகியிருந்தது.

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட 1150 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் பலர் வேறு இடங்களில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
டித்வா ஏற்படுத்திய பரவலான பேரழிவுக்கு பின்னர் 93 நாட்களுக்கு மேலாக, மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், காணாமல்போன 173 பேரை, இதுவரையிலும் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 18 மணி நேரம் முன்
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri